Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓட்டுனர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை வழங்கக்கூடிய நகரங்களுள் மும்பை!! இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்கெடுப்பு!
ஹியாகார் என்ற யுகே-வை சேர்ந்த கார்-பகிர்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, வாகன ஓட்டுனர்களுக்கு சவாலாக, உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 36 நகரங்களை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நமது தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்டவை அடங்கும் இந்த லிஸ்ட்டை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
வாகன ஓட்டுனர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை வழங்ககூடிய நகரங்களை உள்ளடக்கும் இந்த லிஸ்ட்டில் தலைநகர் டெல்லி மட்டுமில்லாமல் மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களும் உள்ளன. ஏகப்பட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலின் தீவிரம், தனிநபர் கார்களின் எண்ணிக்கை, மக்களின் போக்குவரத்து தேர்வுகள், நகரத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, சாலைகளின் தரம், நகர அடர்த்தி மற்றும் வருடத்திற்கு சராசரியாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பவை இந்த காரணிகளில் அடங்குகின்றன.
உலகளவில் உள்ள பெரு நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் இந்த காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் 10 ஆகும். இதில் மும்பை 10ற்கு 7.4 மதிப்பெண்களையும், டெல்லி 5.9 மதிப்பெண்களையும், பெங்களூர் 4.7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளன.
ஹியாகார் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த அமெரிக்க நகரத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் 2.1 ஆகும். அதாவது லிமாவில் தான் வாகன ஓட்டுனர்களுக்கு இந்த உலகிலேயே குறைந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.
மேற்கூறப்பட்ட காரணிகளில் அனைத்திலும் டிக் செய்யப்பட்டுள்ள மும்பை இந்த மதிப்பெண்களுக்கு ஏற்ற நகரமே ஆகும். ஏனெனில் மும்பையின் முக்கிய பகுதிகளான பல்கார்க் மற்றும் தானேவில் மழை பெய்தால் சாலையில் முற்றிலுமாக நகரவே முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது கூட கடந்த 24 மணிநேரமாக மும்பையில் சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மும்பையில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் பல பேருந்து வழித்தடங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன. மும்பையின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற மும்பை - டெல்லி விரைவு சாலை இன்னமும் கட்டமைப்பு பணிகளில் உள்ளது.
2019 மார்ச் 9ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுவரும் இந்த சாலை அமைப்பு பணிகள் 2023 ஜனவரியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையேயான தூரத்தை சுமார் 280கிமீ வரையில் குறைக்கும் இந்த புதிய விரைவு சாலையினை சமீபத்தில் தான் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார்.
பார்வையிட்டது மட்டுமின்றி, கியா கார்னிவல் எம்பிவி காரில் மணிக்கு 170கிமீ வேகத்தில் பயணித்து சோதனை செய்து பார்த்தது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது. இந்த புதிய விரைவு சாலை மஹாராஷ்டிரா மற்றும் தலைநகர் டெல்லிக்கு இடையே ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கிறது.
சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான சாலைகளில் பயணம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மக்கள் பணம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த விரைவு சாலையின் மூலம் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.1,500 கோடி வரையில் அரசாங்கத்திற்கு டோல்கேட்கள் மூலமாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பயண தூரம் 280கிமீ வரையில் குறைவதால், பயண நேரமும் வெகுவாக குறையும். இதுகுறித்து அமைச்சர் அளித்த தகவலின்படி, சண்டிகரில் இருந்து டெல்லியையும், டெல்லியில் இருந்து டெக்ராடூனையும் வெறும் 2 மணிநேரத்தில் அடைந்துவிடலாம். இந்த விரைவு சாலை கட்டுமான பணிகள் சுமார் ரூ.98,000 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
கிட்டத்தட்ட 1,200கிமீ தூரத்திற்கு இன்னும் கட்டுமான பணிகள் உள்ளன. மொத்தம் 8 பாதைகளை கொண்டதாக இந்த விரைவுசாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றும் சராசரியாக 21 மீட்டர்கள் அகலம் கொண்டவை என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இதற்காகவே முன்னெச்சரிக்கையாக, 8 பாதைகளில் இருந்து 12 பாதைகள் வரையில் விரிவுப்படுத்தி கொள்ளும் வகையில் இந்த விரைவு சாலை உருவாக்கப்படுகிறது. தற்போதைக்கு டெல்லி- மீரட் இடையேயான பகுதி மட்டும் பொது பயன்பாட்டிற்கு பகுதி வாரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் முழுவதுமாக அடுத்த அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.