Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடேங்கப்பா இவ்வளவு நேரமா! உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா?
உலகிலேயே அதிக நேரம் மற்றும் தூரம் பயணிக்கும் முதல் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் அதன் முதல் பயணத்தத் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தரை வழி மற்றும் கடல் வழி பயணத்தைக் காட்டிலும் வான் வழி பயணம் பல்வேறு சுவாரஷ்யங்களை அடக்கியதாக இருக்கின்றது.
இந்த பயணத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த குவாண்டஸ் என்னும் விமான நிறுவனம், நீண்ட நேரம் பயணிக்கின்ற வகையிலான விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விமானம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று அதன் முதல் நீண்ட நேர பயணத்தைத் தொடங்க இருக்கின்றது. அந்தவகையில், தொடர்ச்சியாக 20 மணி நேரம் வானில் வட்டமடிக்க இருக்கின்றது.
உலகிலேயே இந்தளவிற்கு அதிக நேரம் இயங்கக்கூடிய முதல் விமானமாக இது இருக்கின்றது. அந்தவகையில், தனது நீண்ட தூர பயணமாக முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு அது பயணிக்க உள்ளது.
வருகின்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் இருந்து புறப்படும் அந்த விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயணித்தவாறு ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவை வந்து சேரும் என குவாண்டஸ் நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு முன்னதாக, விமானம் நீண்ட தூர பயணத்தை சமாளிக்குமா என்பதனை ஆய்வும் செய்யும் வகையில், பலபரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், தொடர்ச்சியாக இதுவரை மூன்று முறை 19 மணி நேரம் இடைவிடாது பயணிக்க வைத்து அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், வெற்றியடைந்ததை அடுத்து, குவாண்டஸ் நிறுவனம் இந்த நீணட தூர பயணச் சேவையை முதல் முறையாக மேற்கொள்ள இருக்கின்றது.
மேலும், இத்திட்டத்திற்கு 'புராஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரை அது வைத்துள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான பிரிஸ்போன், சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை இடைவிடாமல் இயக்க திட்டமிட்டிருக்கின்றது குவாண்டஸ்.
இந்த பயணத்தின்போது அதிக எரிபொருளை சேமித்து வைப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், எடைக்குறைப்பு உள்ளிட்ட செயலை அது மேற்கொண்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 40 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில், விமான பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எடைக்குறைப்பு நடவடிக்கையானது, மைலேஜைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டிருப்பதாக குவாண்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகுறித்த கேள்வி மக்கள் மத்தியில் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. அதனை விளக்கும் வகையில், குவாண்டஸ் நிறுவனத்தின் சிஇஓ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானத்தை எப்போதும் கண்கானிக்கின்ற வகையில் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள், பயணிகளுக்கு தேவையான சொகுசு வசதிகள் மற்றும் உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்வார்கள். அத்துடன், பயணிகளின் செயல்களையும் தொடர்ச்சியாக மருத்துவர்கள் குழு கண்கானிக்கும். அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படுமேயானால், அவர்கள் அதனை வழங்குவர். இதற்கான மருத்துவ கருவிகள் அனைத்தும் அந்த விமானத்தில் நிறுவப்பட்டிருப்பதை அறிக்கை உறுதி செய்துள்ளது.
அத்துடன், பயணிகளைப் போன்றே விமானிகளின் மூலை மற்றும் இதயதுடிப்பை ஆய்வு செய்யும் வகையில் இசிஜி கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பயணிகளைப் பொறுத்தவரை, நேர வீணடிப்பை குறைக்கவும், நிதானமான மற்றும் சுவாரஸ்யமான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜாய்ஸ் தெரிவித்தார்.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?