Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அடேங்கப்பா இவ்வளவு நேரமா! உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா?
உலகிலேயே அதிக நேரம் மற்றும் தூரம் பயணிக்கும் முதல் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் அதன் முதல் பயணத்தத் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தரை வழி மற்றும் கடல் வழி பயணத்தைக் காட்டிலும் வான் வழி பயணம் பல்வேறு சுவாரஷ்யங்களை அடக்கியதாக இருக்கின்றது.
இந்த பயணத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த குவாண்டஸ் என்னும் விமான நிறுவனம், நீண்ட நேரம் பயணிக்கின்ற வகையிலான விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விமானம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று அதன் முதல் நீண்ட நேர பயணத்தைத் தொடங்க இருக்கின்றது. அந்தவகையில், தொடர்ச்சியாக 20 மணி நேரம் வானில் வட்டமடிக்க இருக்கின்றது.
உலகிலேயே இந்தளவிற்கு அதிக நேரம் இயங்கக்கூடிய முதல் விமானமாக இது இருக்கின்றது. அந்தவகையில், தனது நீண்ட தூர பயணமாக முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு அது பயணிக்க உள்ளது.
வருகின்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் இருந்து புறப்படும் அந்த விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயணித்தவாறு ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவை வந்து சேரும் என குவாண்டஸ் நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு முன்னதாக, விமானம் நீண்ட தூர பயணத்தை சமாளிக்குமா என்பதனை ஆய்வும் செய்யும் வகையில், பலபரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், தொடர்ச்சியாக இதுவரை மூன்று முறை 19 மணி நேரம் இடைவிடாது பயணிக்க வைத்து அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், வெற்றியடைந்ததை அடுத்து, குவாண்டஸ் நிறுவனம் இந்த நீணட தூர பயணச் சேவையை முதல் முறையாக மேற்கொள்ள இருக்கின்றது.
மேலும், இத்திட்டத்திற்கு 'புராஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரை அது வைத்துள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான பிரிஸ்போன், சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை இடைவிடாமல் இயக்க திட்டமிட்டிருக்கின்றது குவாண்டஸ்.
இந்த பயணத்தின்போது அதிக எரிபொருளை சேமித்து வைப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், எடைக்குறைப்பு உள்ளிட்ட செயலை அது மேற்கொண்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 40 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில், விமான பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எடைக்குறைப்பு நடவடிக்கையானது, மைலேஜைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டிருப்பதாக குவாண்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகுறித்த கேள்வி மக்கள் மத்தியில் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. அதனை விளக்கும் வகையில், குவாண்டஸ் நிறுவனத்தின் சிஇஓ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானத்தை எப்போதும் கண்கானிக்கின்ற வகையில் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள், பயணிகளுக்கு தேவையான சொகுசு வசதிகள் மற்றும் உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்வார்கள். அத்துடன், பயணிகளின் செயல்களையும் தொடர்ச்சியாக மருத்துவர்கள் குழு கண்கானிக்கும். அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படுமேயானால், அவர்கள் அதனை வழங்குவர். இதற்கான மருத்துவ கருவிகள் அனைத்தும் அந்த விமானத்தில் நிறுவப்பட்டிருப்பதை அறிக்கை உறுதி செய்துள்ளது.
அத்துடன், பயணிகளைப் போன்றே விமானிகளின் மூலை மற்றும் இதயதுடிப்பை ஆய்வு செய்யும் வகையில் இசிஜி கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பயணிகளைப் பொறுத்தவரை, நேர வீணடிப்பை குறைக்கவும், நிதானமான மற்றும் சுவாரஸ்யமான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜாய்ஸ் தெரிவித்தார்.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!