Just In
- 34 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 3 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அடேங்கப்பா இவ்வளவு நேரமா! உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா?
உலகிலேயே அதிக நேரம் மற்றும் தூரம் பயணிக்கும் முதல் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் அதன் முதல் பயணத்தத் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தரை வழி மற்றும் கடல் வழி பயணத்தைக் காட்டிலும் வான் வழி பயணம் பல்வேறு சுவாரஷ்யங்களை அடக்கியதாக இருக்கின்றது.
இந்த பயணத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த குவாண்டஸ் என்னும் விமான நிறுவனம், நீண்ட நேரம் பயணிக்கின்ற வகையிலான விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விமானம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று அதன் முதல் நீண்ட நேர பயணத்தைத் தொடங்க இருக்கின்றது. அந்தவகையில், தொடர்ச்சியாக 20 மணி நேரம் வானில் வட்டமடிக்க இருக்கின்றது.
உலகிலேயே இந்தளவிற்கு அதிக நேரம் இயங்கக்கூடிய முதல் விமானமாக இது இருக்கின்றது. அந்தவகையில், தனது நீண்ட தூர பயணமாக முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு அது பயணிக்க உள்ளது.
வருகின்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் இருந்து புறப்படும் அந்த விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயணித்தவாறு ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவை வந்து சேரும் என குவாண்டஸ் நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு முன்னதாக, விமானம் நீண்ட தூர பயணத்தை சமாளிக்குமா என்பதனை ஆய்வும் செய்யும் வகையில், பலபரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், தொடர்ச்சியாக இதுவரை மூன்று முறை 19 மணி நேரம் இடைவிடாது பயணிக்க வைத்து அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், வெற்றியடைந்ததை அடுத்து, குவாண்டஸ் நிறுவனம் இந்த நீணட தூர பயணச் சேவையை முதல் முறையாக மேற்கொள்ள இருக்கின்றது.
மேலும், இத்திட்டத்திற்கு 'புராஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரை அது வைத்துள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான பிரிஸ்போன், சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை இடைவிடாமல் இயக்க திட்டமிட்டிருக்கின்றது குவாண்டஸ்.
இந்த பயணத்தின்போது அதிக எரிபொருளை சேமித்து வைப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், எடைக்குறைப்பு உள்ளிட்ட செயலை அது மேற்கொண்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக 40 பயணிகளை மட்டுமே அழைத்து செல்ல அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில், விமான பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எடைக்குறைப்பு நடவடிக்கையானது, மைலேஜைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டிருப்பதாக குவாண்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகுறித்த கேள்வி மக்கள் மத்தியில் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. அதனை விளக்கும் வகையில், குவாண்டஸ் நிறுவனத்தின் சிஇஓ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானத்தை எப்போதும் கண்கானிக்கின்ற வகையில் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள், பயணிகளுக்கு தேவையான சொகுசு வசதிகள் மற்றும் உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்வார்கள். அத்துடன், பயணிகளின் செயல்களையும் தொடர்ச்சியாக மருத்துவர்கள் குழு கண்கானிக்கும். அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படுமேயானால், அவர்கள் அதனை வழங்குவர். இதற்கான மருத்துவ கருவிகள் அனைத்தும் அந்த விமானத்தில் நிறுவப்பட்டிருப்பதை அறிக்கை உறுதி செய்துள்ளது.
அத்துடன், பயணிகளைப் போன்றே விமானிகளின் மூலை மற்றும் இதயதுடிப்பை ஆய்வு செய்யும் வகையில் இசிஜி கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பயணிகளைப் பொறுத்தவரை, நேர வீணடிப்பை குறைக்கவும், நிதானமான மற்றும் சுவாரஸ்யமான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜாய்ஸ் தெரிவித்தார்.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!