Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ. 200 கேஷ்பேக் அறிவித்த போன் பே... கொண்டாட்டத்தில் பயனர்கள்... இந்த சலுகை எதற்கு தெரியுமா?
ஆன்-லைன் பண பரிமாற்றம் செய்ய பயன்படும் செல்போன் செயலிகளில் ஒன்றான போன் பே ரூ. 200 கேஷ்பேக் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொது முடக்கம் நீடித்து வந்தநிலையில், தற்போது அதில் லேசான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதேசமயம், வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகளில் முழு முடக்கம் தற்போதும் நீடித்த வண்ணம் இருக்கின்றது.
தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் பெரும்பாலான குறிப்பிட்ட சில பகுதிகள் மெல்ல பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப ஆரம்பித்திருக்கின்றன.
ஆனாலும், வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கு அரசின் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதும் ஓர் காரணமாக உள்ளது.
இந்த நிலையில், தனியார் வாடகை வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக சில வாடகை நிறுவனங்கள் சிறப்பு சலுகைத் திட்டத்தை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான கால் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலாவிற்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஓலா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
போன் பே எனும் மொபைல் செயலி நிறுவனமே இதனை அறிவித்துள்ளது. இது, ஓர் ஆன்லைன் ரீசார்ஜ் மற்றும் பண பரிமாற்றம் செய்யும் செயலி ஆகும். டிஜிட்டல் பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கவும், மக்களை கால் டாக்சி சேவையின் பக்கம் ஈர்க்கும் விதமாகவும் சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது.
அதாவது, இந்த சிறப்பு சலுகை திட்டத்தின்மூலம் அதன் வாடிக்கையாளருக்கு ரூ. 200 கேஷ்பேக் வழங்க இருக்கின்றது போன் பே. முதல் இரு சவாரிகளுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் பொருந்தும்.
அண்மையில் ஓலா மற்றும் போன் பே ஆகிய இரு நிறுவனமும் இணைவிற்கான ஒப்பந்தத்தைப் போட்டன. இதனடிப்படையிலேயே ஓலாவிற்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா கால் டாக்சி ஆப்-ஐப் போலவே போன் பே ஆப்-ஐ ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய செல்போன்களில் பயன்படுத்த முடியும்.
தற்போது ஓலா கால் டாக்சி ஆப்பை இந்தியாவில் பல மில்லியன் நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் விதமாகவே போன் பே இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓலா கால் டாக்சி பக்கம் ஈர்க்கப்படுவர் என நம்பப்படுகின்றது. இத்துடன், போன் பே பயனரையும் இந்த அறிவிப்பு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆப்பின் மூலம் பிறரின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேசமயம், யுபி ஐடி மூலம் பிறரிடத்தில் இருந்து நேரடியாக பணத்தை பெறும் வசதியும் இடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
கொரோனா பரவல் ஆரம்பித்தற்கு பின்னர் மக்கள் நேரடியாக பிறரிடத்தில் இருந்து பணத்தைப் பெறுதல் போன்றவற்றைத் தவிர்த்து வருகின்றனர். இதே யுக்தியைதான் சில நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
எனவே, பலர் சமூக இடைவெளியை உறுதி செய்யும் விதமாக ஆன்-லைன் பேமெண்ட் மற்றும் தொடர்பில்லா நுகர்வு உள்ளிட்டவற்றிற்கு மாறி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே ஓலா நிறுவனம் போன் பே நிறுவனத்துடன் கூட்டு வைத்தது. மேலும், இதனை ஊக்குவிக்கும் விதமாக முதல் இரு சவாரிகளுக்கு மட்டும் ரூ. 200 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை கால் டாக்சி நிறுவனங்கள் எதிர்பாராத அடியைப் பெற்று வருகின்றன. இதனால், கால் டாக்சி துறை மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. மக்களின் இடம்பெயர்தலுக்கு அரசு தடை விதித்ததே கால் டாக்சிதுறையின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது.
இதனால் மக்களுடன் சேர்ந்து வாகனங்களும் சாலையோரங்களில் முடங்கின. இந்த நிலையில்தான் பொது முடக்கத்தில் லேசான தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களை கால் டாக்சி பக்கம் ஈர்க்க போன் பேவின் சலுகை திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓலா மற்றும் போன் பே கூட்டணி குறித்து ஓலாவின் செய்தித் தொடர்பாளரான ஆனந்த் சுப்பிரமணியன் கூறியதாதவு, "தொற்றுநோய் பேரிடர் காலத்தில் டிஜிட்டல் கட்டணமுறை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கட்டண பலுவை குறைக்கும் விதமாக மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அறிவித்து வருகின்றது. இதனடிப்படையிலேயே நாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் போன் பே உடன் இணைவு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350