Just In
- 9 min ago ஹோண்டா தயாரித்த எலெக்ட்ரிக் காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனு
- 1 hr ago இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- 2 hrs ago வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- 2 hrs ago ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
Don't Miss!
- Technology EPFO முக்கிய அறிவிப்பு.. PF கணக்கு இருக்கா? அப்போ உடனே இதை பண்ணனும்.. வந்தது புது அப்டேட் உத்தரவு..
- News லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு? எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
- Movies சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
இரவு 10 மணிக்கு மேல் போன் பேசினால் அபராதம்... இந்த ரூல்ஸ் எல்லாம் டிடிஆர்கே தெரியாது...
இந்திய ரயில்வேயில் இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக போன் பேசினாலோ அல்லது பாடல் கேட்டாலோ அபராதம் விதிக்கப்படச் சட்ட வழிமுறைகள் உள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வசதி ரயில்வே தான். இந்திய ரயில்வே இந்தியாவிற்குள் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ரயில்வே இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய தூணாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட ரயில் பயணத்திற்குப் பின்னால் ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்திருக்கிறது. ரயிலில் நாம் ஏகப்பட்ட முறை பயணித்திருந்தாலும் நமக்கே தெரியாத பல தகவல்கள் இருக்கிறது.
இப்படியாக ரயில்வே போக்குவரத்தில் இந்தியாவில் பயணிகளின் சௌகரியத்திற்காக இருக்கும் விதி ஒன்று இருக்கிறது. பலருக்கு இந்த விதி குறித்துத் தெரியாது. ஏன் இன்று டிக்கெட் பரிசோதகர்களுக்கே இது குறித்து பெரிதாகத் தெரியாமல் இருக்கும். நீங்கள் பயணிக்கும் போது கூட இப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். இது ரயில் சட்ட விதியின் படி தவறு என்று கூட தெரியாமல் நாம் சகித்துக்கொண்டு பயணித்திருப்போம். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத் தான் நாம் இங்கே காணப்போகிறோம்.
பொதுவாக இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் பெரும்பாலான ரயில்கள் இரவு நேரத்தில் தான் பயணிக்கிறது. அதாவது முன் இரவில் பயணத்தைத் துவங்கி அதிகாலை செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்கிறது. இப்படிப்பட்ட பயணத்தில் பயணிகள் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டே பயணிப்பதற்காகத் தான் ரயில்களில் சிலீஃப்பர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ரயில்களில் பயணிகளுக்கு சில நேரங்களில் சக பயணிகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் போயுள்ளது. இந்த பிரச்சனை ஏற்படும் போது எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் நாம் முழித்திருப்போம். சில நேரம் டிக்கெட் பரிசோதகர்களிடம் முறையிட்டாலும் உங்களுக்குத் தொந்தரவு செய்து கொண்டு வரும் சக பயணியும் காசு கொடுத்துத் தான் பயணம் செய்கிறார். அதனால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்துவிடுவர்.
இப்படியாக சக பயணிகளால் இருக்கும் மிகப்பெரிய தொந்தரவு என்றால் அது இரவு நேரங்களில் தூக்க விடாமல் சத்தமாக போன் அல்லது லேப்டாப்பில் பாட்டு கேட்பது ஸ்பீரை இணைத்துப் பாடலை ஒலிக்க விடுவது, இரவில் தூங்காமல் மற்றவர் தூக்கத்தைக் கெடுக்கும்படி போனில் யாரிடமாவது சத்தமாகப் பேசுவது, இரவில் தூங்க விடாமல் லைட்டை போட்டு வைத்திருப்பது அல்லது லைட்ட அணைக்கவிடாமல் தடுப்பது இது எல்லாம் ரயில்வே சட்டப்படி குற்றம்.
ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களிடமே இரவு 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் டிக்கெட்டை பரிசோதனை செய்கிறேன் என்கிற பெயரில் பயணிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது, ஒரு வேலை பயணி இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் அவரது டிக்கெட்டை ஒரு முறை பரிசோதனை செய்யலாம். அல்லது டிக்கெட்டில் ஏதாவது குழப்படி இருக்கும் பட்சத்தில் அவரது டிக்கெட்டை மீண்டும் சோதனை செய்யலாம்.
மற்றபடி சோதனை செய்து பயணிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என டிக்கெட் பரிசோதகர்களுக்கு உத்தரவு உள்ளது. அதே தான் பயணிகளுக்கு சக பயணிகளைத் தொந்தரவு செய்தால், தொந்தரவு ஏற்பட்ட பயணி புகார் அளித்தால் தொந்தரவு தருபவர் மீது நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் உள்ளது. டிக்கெட் பரிசோதகர் இது குறித்து விசாரித்து இந்த விதியை மீறியவருக்கு ரூ250 முதல் அபராதம் விதிக்க முடியும்.
இதனால் இனி நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது யாராவது உங்களுக்கு இப்படியான தொல்லை கொடுத்தால் நீங்கள் தயங்காமல் இது குறித்துத் தயங்காமல் டிக்கெட் பரிசோகதர்களிடம் புகார் செய்யலாம். அதே போல இந்த விதியின்படி இரவு 10 மணிக்கு மேல் நீங்களும் சக பயணிகளுக்குத் தொந்தரவு செய்யாமல் இருங்கள். அதே நேரம் நீங்கள் ஹெட்போனில் பாட்டுக் கேட்கலாம் அதற்கு எந்த தடையும் இல்லை.
-
இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!