Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Movies நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னதான் இருந்தாலும் இப்படி நக்கலடிக்க கூடாதுங்க! பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்! வைரல் வீடியோ!
இளைஞர் ஒருவர் கிரிக்கெட் வீரர் உடையணிந்து பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய வீடியோச இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இளைஞர் ஒருவர் கிரிக்கெட் வீரர்களின் உடை அணிந்து பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகின்றது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் லிட்டர் ஒன்று ரூ. 50க்கும் குறைவாக கிடைத்து வருகின்றநிலையில், இந்தியாவில் ரூ. 100ஐ தாண்டி விற்கப்பட்டு வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர் விலை உயர்வை பெட்ரோல், டீசல் பெற்று வருவதனால் பலர் கார்களில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கும், இருசக்கர வாகனத்தில் இருந்து சைக்கிள் பயன்பாட்டிற்கும் மாறியிருக்கின்றனர். ஒருபக்கம் கொரோனா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்தி வருவதால் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதேசமயம், எரிபொருள் செலவு கையை மீறிவிடக் கூடாது என்பதிலும் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனடிப்படையிலேயே இருசக்கர வாகன பயன்பாடு மற்றும் சைக்கிள் பயன்பாடுகளுக்கு அவர்கள் மாறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலை சென்சுரியை (ரூ.100)த் தொட்டதைக் கண்டித்து இளைஞர் ஒருவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்று கிரிக்கெட் விளையாடுவதைப் போன்று போஸ் கொடுத்திருக்கின்றார். ஸ்கூட்டர் ஒன்றில் வரும் அவர் திடீரென பெட்ரோல் பம்பிற்கு முன்னர் சென்று வெற்றி கனியைப் பறித்ததுபோன்று மட்டையையும், கைகளையும் தூக்கி உற்சாகமடைந்தார்.
தொடர்ந்து, பெட்ரோல் பங்கில் நின்றவாறு பந்தை அடிப்பதுபோன்ற செய்கையும் செய்தார். இதுகுறித்த வீடியோவையே பின்னணி இசையுடன் அவர் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார். குறிப்பாக, கிரிக்கெட் போட்டியின்போது வீரர் சதம் அடிக்கும்போது கொடுக்கக் கூடிய கமென்ட்ரியை அவர் பின்னணியில் சேர்த்திருக்கின்றனர். இத்துடன், திரைப்படங்களின் பின்னணி இசைகள் சிலவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் மிக வைரலாக வருகின்றது. பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கான வரியை ஒன்றிய அரசு பல மடங்கு அதிகமாக விதித்திருப்பதே இந்தியாவில் அதிக விலையில் அவை விற்பனையாவதற்கான காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மே 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோலின் அடிப்படை விலையே ரூ. 34.19 மட்டுமே. ஆனால், பல தரப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 92.58க்கு அன்றைய தினம் விற்பனைச் செய்யப்பட்டு. கலால், வாட், சரக்கு மற்றும் டீலர் கமிஷன் என பல முனைகளில் கூடுதல் தொகை (வரி) சேர்க்கப்பட்டு அடிப்படை விலையைவிட பல மடங்கு அதிக விலையில் பெட்ரோல், டீசல் விற்பனைச் செய்யப்படுகின்றது.
இதில், மத்திய அரசு மட்டும் கலால் வரியாக ஒரு லிட்டருக்கு 35.35 சதவீதம் வரை வரியாக பெற்றுக் கொள்கின்றது. டீலர் கமிசன் சராசரியாக ரூ. 3.77 வரை ஒரு லிட்டருக்கு வசூலிக்கப்படுகின்றது. இதுதவிர மாநிலங்களும் தங்களின் பங்காக கணிசமான தொகையை வரியாக விதிக்கின்றன.
Shyam Rangeela
இதன் விளைவாக இன்று பெட்ரோல் ரூ. 100ஐக் கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 100ஐத் தொட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையையே விநோத முறையில் இளைஞர் நக்கலடித்துள்ளார்.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!