Just In
- 9 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 48 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?
பிரபல தனியார் நிறுவனம் நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மின்வாகனங்களைச் சார்ந்து இயங்கும் ஜிப் (Zypp) நிறுவனம் இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5 ஆயிரம் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை திறக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் என்பது மின் வாகனங்களுக்கு தேவையான பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வழங்கும் ஓர் மையமாகும். இதனையே ஜிப் விரைவில் நாடு முழுவதும் அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.
இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு பயன்படுகின்ற வகையிலேயே இந்த ஸ்வாப்பிங் பேட்டரி ஸ்டேஷன்கள் செயல்பட இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து நிலையங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஜிப் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், இப்பணியில் நிறுவனம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.
தற்போது நாட்டின் குறிப்பிட்ட ஆறு நகரங்களில் மட்டுமே ஜிப் நிறுவனத்தின் ஸ்வாப்பபிள் பேட்டரி ஸ்டேஷன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை விரிவாக்கும் செய்யும் முயற்சியிலேயே நிறுவனம் இறங்கியிருக்கின்றது. ஆகையால், தற்போது டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் மட்டுமே காணப்பட்டு வரும் மின் வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மையங்கள் விரைவில் நாடு முழுவதும் காட்சியளிக்க இருக்கின்றன.
நடப்பாண்டில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே,சண்டிகர், லக்னோ, மீரட், இந்தோர், போபால் ஆகிய 30க்கும் மேற்பட்ட நகரங்களிலேயே முதலில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதையடுத்தே நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களை நோக்கி நகர திட்டமிட்டிருப்பதாக ஜிப் நிறுவனத்தின் சிஇஓ கூறியிருக்கின்றார்.
அந்தவகையில், மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 100 நகரங்களில் பேட்டரிக்கான மையங்களை நிறுவ நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன்மூலம் மின்வாகனங்களின் வளர்ச்சிக்கு தடை கல்லாக இருக்கும் அடிப்படை வசதி பற்றாக்குறை கணிசமாக ஒழிக்கப்படும். மேலும், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க இது மிக உதவியாக இருக்கும்.
இந்த பணிக்காக ஜிப் நிறுவனம் ரூ. 50 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு ஸ்வாப்பபிள் பேட்டரி மையத்தை உருவாக்க ரூ. 1 லட்சம் என்கிற அளவில் இந்த தொகை ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
ஜிப் நிறுவனம் எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்களை ஷேர் திட்டத்தின் அடிப்படையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், நிறுவனத்திடம் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதாக நிறுவனம் கூறுகின்றது.
ஆகையால் தங்கள் நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களின் வருகை அதிக பயனை அளிக்கும் என நம்புகின்றது. அதேசமயம், இதுபோன்று அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதனால் மின் வாகனங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்ய முடியும். தற்போது வரை மக்கள் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் ஆகும்.
எனவேதான், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் மற்றும் சிறப்பு வசதிகள் சிலவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், நாட்டின் முன்னணி ஆயில் நிறுவனங்களும் தங்களின் எரிபொருள் நிலையங்களில் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!