Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விரைவாக 2 சக்கர, 3 சக்கர வாகனங்களுக்கு பிஎஸ்-6 மாசு விதியை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு
2 சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு என புதிய பாரத் ஸ்டேஜ் பிஎஸ்-6 விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டிற்குள், புதிய பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) 6 விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. ஆரம்ப கட்டத்தில், இந்த நெறிமுறைகள், பயணியர்வாகனங்களுக்கும், கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே அரசு வழங்கி இருந்தது.
இந்திய வாகன சந்தைகளின் விற்பனை தொடர்பான புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் விற்கபடும் வாகனங்களில் 80 சதவிகித வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக, இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் விற்கபட்டு வருகிறது. இதில், சுமார் 1.6 கோடி வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவும், 5.3 லட்சம் வாகனங்கள் 3 சக்கர வாகனங்களாக உள்ளன.
புதிய பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) நெறிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பு, 2020-ஆம் ஆண்டிற்குள் தேவையான பிஎஸ் 6 நெறிமுறைகளுக்கு தகுந்த அளவில் எரிபொருள் கிடைக்குமா என்ற சந்தேகங்கள் நிலவி வந்தது.
இது குறித்து தெளிவு படுத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், பிஎஸ் 6 நெறிமுறைகளை நடைமுறை படுத்த தேவையான எரிபொருள் கட்டாயம் கிடைக்கும் என கூறியுள்ளது.
மேலும், மாசு வெளிப்பாடு தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க, நெடுஞ்சாலை துறை அமைச்சகம், கன ரக தொழிற்சாலை அமைச்சகம், சுற்றுசூழல் அமைச்சகம், மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஆகிய 4 அமைச்சகங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி கொண்ட்டிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.