Just In
- 56 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செல்போனில் பேசி கொண்ட பைக் ஓட்டியவருக்கு ரூ31,556 அபராதம், அதிரடி வசூல் வேட்டையில் இறங்கிய போலீஸ்
செல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டியது, சிக்னல்களை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் போடாமல் பயணித்தது என ஒரு பைக் ஓட்டி மீது போலீசார் 135 வழக்குகளை பதிவு செய்து அவருக்கு ரூ 31 ஆயிரம் அபராதம் விதித்துள்
செல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டியது, சிக்னல்களை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் போடாமல் பயணித்தது என ஒரு பைக் ஓட்டி மீது போலீசார் 135 வழக்குகளை பதிவு செய்து அவருக்கு ரூ 31 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அவரது பைக்கை செகெண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்றால் கூட இந்த விலைக்கு அவரது அவரால் விற்பனை செய்ய முடியாது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறும் வாகனங்களுக்கான எலெக்ட்ரானிக் செல்லான் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் சார்பில் ஸ்பீடு கேமராக்களை பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதில் ரோட்டில் வாகனத்தில் பயணிக்கும் யாராவது விதிமுறைகளை மீறி பயணித்தால் அவர்கள் உடனடியாக அந்த சம்பவத்தை புகைப்படமாக எடுத்து அதன் மூலம் அந்த வாகனத்தின் உள்ள நம்பர் பிளேட்டை கண்டுபிடித்து அந்த வாகனத்திற்காகன அபராதம் டிஜிட்டல் முறையில் விதிக்கப்பட்டு இது குறித்து அவர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
இது போன்ற கருவி ஐதராபாத்தில் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளது. அங்கு வாகனத்தில் விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில் அதில் ஒரு சுவரஸ்யமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
அதில் ஐதராபாத், அல்வால் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் என்பவர் தினமும் பைக்கில் பயணிக்கூடியவர். இவர் தனது ஹீரோ கிளாமர் பைக் மூலம் ஐதராபாத்தில் உள்ள பல்வேறு பகுதியில் தொடர்ந்து பணி காரணமாக பயணித்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களில் சுமார் 135 முறை பைக்கில் விதிமீறலில் ஈடுபட்டதாக போலீசார் அவர் மீது இ-செல்லான் விதித்துள்ளார். இது குறித்து அவருக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிமுறை மீறல்களுடனேயே பயணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத் டிராபிக் போலீசார் வழக்கான வாகனச்சோதனைக்காக ஹிமாயத்நகர் ஒய் ஜங்ஷன் அருகே கூடி சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த கிருஷ்ண பிராகாஷையும் நிறுத்தி அவரது வாகனத்தையும் சோதனை செய்தனர்.
அப்பொழுது அவரது பைக்கின் பதிவு எண்ணை போலீசார் தங்களிடம் உள்ள கருவியில் பதிவு செய்து அந்த வாகனத்திற்கான இதற்கு முன்னர் எதுவும் அபராதங்கள் செலுத்தாமல் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அப்பொழுது காத்திருந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி
கிருஷ்ணா பிரகாஷின் வாகனம் இதுவரை 135 முறை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதும். அதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட அபதாரத்தை அவர் இதுவரை செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதை பார்த்தை அதிகாரிகள் சற்று அதிர்ந்து போயினர். இதுவரை அவர்கள் இவ்வளடு அதிக எண்ணிக்கையிலான விதிமுறை மீறல்களை பார்த்ததே இல்லை.
அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மொத்தமாக கணக்கிடுகையில் ரூ 31,556 அவர் அபராத கட்டணமாக செலுத்த வேண்டியது. இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு அந்த அபராத்திற்காகன சார்ஜ் ஷீட்டை அவரிடம் வழங்கி விட்டு அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
அவர் கோர்ட்டில் வந்து இந்த அபராத தொகையை செலுத்தி விட்டுதான் இந்த பைக்கை பெற முடியும் என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அபராத தொகை ரூ 31,556 என்று பதிவாகியிருந்ததை கண்டு கிருஷ்ண பிராகாஷூம் அதிர்ச்சிக்குள்ளானார்.
அவர் 135 முறை விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டவகைகளில் பல்வேறு விதமான விதிமுறை மீறல்கள் உள்ளன. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல், ராங் சைடில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல் என பல்வேறு வகையான விதிமுறைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அதில் அதிகமாக செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதலும், டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் வாகனம் ஓட்டுதலும் தான் அதிகமாக முறை செய்பப்பட்டு ஸ்பீடு கேமராவில் சிக்கியுள்ளார். அதற்காக தான் அதிக எண்ணிக்கையில் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஹீரோ கிளாமர் பைக் தற்போது குறைந்தபட்சமாக ரூ 56 ஆயிரம் என்று எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து விற்பனையாகிறது. புதிய பைக் வாங்கினாலே ரூ 56 ஆயிரம் தான் எனும் சூழ்நிலையில் அவர் பைக்கை, செகெண்ட் ஹேண்ட் வாகன சந்தையில் விற்பனை செய்தால் கூட ரூ 31 ஆயிரம் கிடைப்பது சந்தேகம் தான்.
இதனால் கிருஷ்ண பிரகாஷ் இந்த அபராதத்தை செலுத்துவாரா அல்லது அப்படியே விட்டு விட்டு வேறு வாகனத்தை வாங்கி பயன்படுத்த துவங்கி விடுவாரா என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. இந்த பைக்கை அவர் அபராதம் செலுத்தி வாங்குவதன் மூலம் அவருக்கு எந்த விதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.
மாறாக அந்த அபராத தொகையை முன் பணமாக செலுத்தி இதை விட சிறந்த புதிய பைக்கை அவரால் பெற முடியும் அப்படியாக அவர் பெற்றுவிட்டால் இந்த அபராத தொகை செலுத்தப்படாமல் இது முற்றிலும் வராத அபராதமாகவோ பாேய்விடும்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் இது போன்று ஸ்பீடு கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்களை அதாரத்துடன் எடுத்துஅவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எலெக்ட்ரானிக் முறையில் அவர்களுக்கு தகவல் அனுப்பபடும். இதன் மூலம் போலீசாரின் நேரம் மற்றும் சக்தி குறைவாகவே செலவாகிறது. மேலும் இதன் மூலம் மேலிட சிபாரிசுகளும் தடுக்கப்படும்.
ஆனால் இதில் சில குழப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. வாகனம் ஓட்டுபவர் போலியான நம்பர் பிளேட்டுடன் ஓட்டி அவர்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அந்த போலியான நம்பர் பிளேட்டின் உண்மையான நபருக்கு தான் அபராதம் விதிக்கப்படும். ஆக அவர் எந்த விதிமுறைகளையும் மீறாவிட்டாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
சென்னையில் பல இடங்களில் இது போன்ற ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த கேமராவில் உங்கள் வாகனம் விதிமுறை மீறலில் ஈடுபடும் போது சிக்கினால் உடனடியாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு வேலை உங்கள வாகனத்தை உங்கள் நண்பரோ அல்லது வேறு யாரோ எடுத்து சென்று அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் கூட அந்த வாகனத்தின் உரிமையாளருக்கே அபராதம் விதிக்கப்படும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள்.
Source: HMTV News
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?