Just In
- 46 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்கூட்டரில் சீறிப்பாய்ந்த 5 வயது சிறுமி.. தந்தைக்கு கடும் தண்டனை கொடுத்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ..
5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தைக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஸ்கூட்டர் ஓட்டுவது தொடர்பான வீடியோ வைரலானதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெறும் 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தைக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஸ்கூட்டர் ஓட்டுவது தொடர்பான வீடியோ வைரலானதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ் பெறாமல், வாகனங்களை இயக்குவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இந்திய சட்ட திட்டங்களின்படி 18 வயது நிரம்பிய ஒருவரால்தான், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெற முடியும்.
ஆனால் 18 வயது நிரம்புவதற்கு முன்னரே, மைனர் வயது சிறார்கள் பலர் வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுகின்றனர். உரிய வயதை எட்டுவதற்கு முன்னதாகவே, அதுவும் மிக மிக குறைவான வயதில் அவர்கள் வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுவதால், விபத்து அபாயம் எழுந்துள்ளது.
அப்படிப்பட்ட சிறார்களின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஒரு சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை ஓட்ட, அவரது தந்தை அனுமதித்ததே இந்த பரபரப்பிற்கு காரணம். இது தொடர்பான வீடியோ வெளியாகி கேரளா மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் கொச்சியில் நடைபெற்றுள்ளது. ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஒரே ஸ்கூட்டரில் பயணிக்கின்றனர். அப்போது ஸ்கூட்டரை கண்ட்ரோல் செய்து ஓட்ட, தனது 5 வயது மகளுக்கு தந்தை அனுமதி கொடுத்து விடுகிறார்.
இதன்பின் அந்த சிறுமி ஃப்ளோர் போர்டில் நின்று கொண்டு, ஸ்கூட்டரை நல்ல வேகத்தில் ஓட்டி செல்கிறார். போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, அந்த வழியாக காரில் வந்தவர்கள் இதனை வீடியோவாக எடுத்தனர்.
5 வயதே நிரம்பிய சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்தது தவிர, வேறு சில விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. 2 சீட்டர் ஸ்கூட்டரான இதில், 4 பேர் பயணித்துள்ளனர். அத்துடன் ஆண் மட்டுமே ஹெல்மெட் அணிந்துள்ளார். எஞ்சிய 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஹெல்மெட் அணியவில்லை.
இந்த வீடியோ வெளியான தினத்திலேயே வைரலாக பரவ தொடங்கியது. இதனால் வீடியோ வெளியான உடனே, கேரள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்பின் 5 வயது சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தையின் லைசென்ஸ், அன்றைய தினம் மாலையே சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
அவரின் லைசென்ஸ் ஒரு வருட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் காலம் முடியும் வரை அந்த நபரால், சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட முடியாது. கேரள மோட்டார் வாகன துறை (Motor Vehicle Department-MVD) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த தண்டனையுடன் மட்டும் அந்த நபர் தப்பிக்க போவதில்லை. கொச்சியில் உள்ள எடப்பள்ளி போலீசார்தான் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
உரிய வயதை எட்டுவதற்கு முன்னால், பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவது சட்ட விரோதமானது. பாதுகாப்பற்றதும் கூட. இந்த வகையில் மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன.
ஏனெனில் முறையான பயிற்சி இன்றி வாகனம் ஓட்டுபவர்களால், சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்தியாவில் சமீப காலமாகவே விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
குடி போதையில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது உள்ளிட்டவைகளே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில், உரிய பயிற்சி பெறாமல் பொது சாலைகளில் வாகனம் ஓட்ட வருபவர்களும், விபத்துகளுக்கு ஒரு காரணமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
Source: Asianetnews
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு