Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வரும் 2019 ஜன.,15 முதல் ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டாது, சொட்டை விழாது; மத்திய அரசு புதிய உத்தரவு
வரும் 2019 ஜன.,15ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள் தற்போது உள்ள எடையை விட 300 கிராம் குறைவான எடை கொண்ட ஹெல்மெட்டை தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும், ஹெல்மெட் பின்புறம் காற்று செல்லும்
வரும் 2019 ஜன.,15ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள் தற்போது உள்ள எடையை விட 300 கிராம் குறைவான எடை கொண்ட ஹெல்மெட்டை தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும், ஹெல்மெட் பின்புறம் காற்று செல்லும் படி கட்டாயமாக வென்டிலேஷன் வசதி அமைக்கப்பட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குரவரத்து அமைச்சகம் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனங்களை பிஐஎஸ் சர்டிபிகேஷனிற்குள் கொண்டு வந்துள்ளது. இவ்வாறாக பிஐஎஸ் சர்பிகேஷன் பெறாத நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெட்மெட்கள் தரமற்ற ஹெல்மெட்களாகவே அரசு கருதும்.
இந்த சர்டிபிகேட் மூலம் தரமற்ற ஹெல்மெட் தயாரிப்பை தடுக்கவே அரசு இந்த விதிமுறையை வைத்திருக்கிறது. ஆனால் தற்போது உள்ள ஹெல்மெட்களை பெரும்பாலான பைக் ஓட்டுநர்கள் அணிய விரும்புவதில்லை
இந்த ஹெல்மெட்டின் எடை, மற்றும் ஹெமெட்டிற்குள் காற்று செல்லாமல் இருந்தல் போன்ற காரணங்களால் முடிஉதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்னைகளை பலர் அனுபவிக்கின்றனர். அரசு கட்டாயப்படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே பலர் அணிகின்றனர்.
இது குறித்து ஆய்வு நடத்திய அரசு ஹெல்மெட்டின் அதிகபட்ச எடையான 1.5 கிலோ எடையை 1.2 கிலோ எடையாக குறைக்கவும் ஹெல்மெட்டில் தலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் கட்டாயம் காற்று உள்ளே செல்லும் படி வென்டிலேஷன் அமைத்து தான் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு நடத்திய ஆய்வில் கடந்த 2017ம் ஆண்டு சுமார் 15,000 பேர் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை காவல் துறையில் புகார் பதிவாதில் இருந்து எடுக்கப்பட் எண்ணிக்கை தான் எனவும், இந்தியாவில் மொத்தம் 70 சதவீதம் வாகனங்கள் டூவீலர்தான் அதில் 3ல்1 பங்கு டூவீலர் ஓட்டுர்நர் ஹெல்மெட் அணிவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிஐஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :"தற்போது இந்த உத்தரவு நடைமுறையில் உள்ள தரமான ஹெட்மெட்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹெல்மெட் என பலர் தொப்பி ரக ஹெல்மெட்களை அணிந்து வருகின்றனர். அந்த ரக ஹெல்மெட்களை பிஐஎஸ் விதிக்குள் வராது.
ஹெல்மெட்கள் பின்பக்க தலையை பாதுகாக்காது. மேலும் ஹெல்மெட்டும் பாதுகாப்பானதாக இருக்காது இதனால் அந்த ரக ஹெல்மெட்களை மக்கள பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். போலீசாரும் அந்த ரக ஹெல்மெட்களை அணிந்து வருபவர்களை ஹெல்மெட் அணியாதவர்கள் என்றே கருதுவர்." என கூறினார்.
மேலும் இந்த புதிய உத்தரவிற்கு 6 மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விற்கப்படும் ஹெல்மெட்கள் எதுவும் விற்பனை செய்யகூடாது தற்போது அதிகபட்சமாக 1500 கிராம் எடை கொண்ட ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுகின்றன. இனி 1200 தான் தயாரிக்கப்பட வேண்டும்.
மேலும் ஹெல்மெட்டில் தலைக்கு பின்பகுதியில் காற்று செல்லும் படி வென்டிலேஷன் அமைக்கப்பட வேண்டும். வரும் ஜன. 15ம் தேதிக்கு பின் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள் அனைத்தும் இந்த விதிப்படி தயாரிப்பட்ட ஹெல்மெட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!
- போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..
- மாருதி கார்களுக்கான புதிய மொபைல்போன் ஆப் அறிமுகமாகிறது!
- கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்
- ஏன்னா இது வாலிப வயசு.. இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதன் அதிர்ச்சிகரமான காரணங்கள்..
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!