Just In
- 36 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகில் வேறு எந்த டூவீலர் நிறுவனமும் படைக்காத புதிய சாதனையை நிகழ்த்தியது இந்தியாவின் ஹீரோ..
உலகில் இதுவரை வேறு எந்த இரு சக்கர வாகன நிறுவனமும் படைக்காத புதிய சாதனை ஒன்றை, இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிகழ்த்தியுள்ளது.
உலகில் இதுவரை வேறு எந்த இரு சக்கர வாகன நிறுவனமும் படைக்காத புதிய சாதனை ஒன்றை, இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிகழ்த்தியுள்ளது. பிரம்மிக்க வைக்கும் அந்த உலக சாதனை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 46 சதவீத மார்க்கெட் ஷேரை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.
இந்த சூழலில், புதிய உலக சாதனை ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை உலகின் வேறு எந்த நிறுவனமும் இதுவரை விற்பனை செய்தது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் விற்பனை செய்துள்ளது.
அவ்வளவு ஏன்? உலகின் வேறு எந்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமும் ஒரே மாதத்தில் 7.5 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லையே இதுவரை எட்டியது கிடையாது. இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் முதல் முறையாக 7.5 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லையே எட்டியுள்ளது.
இதுதவிர ஒரே மாதத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்தியிருக்கும் நிகழ்வு, நடப்பு நிதியாண்டில் 3 முறை உள்பட மொத்தம் 5வது முறையாக நிகழ்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பர்), மொத்தம் 42 லட்சத்திற்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில், பண்டிகை காலம் தொடங்கவுள்ளதால், ஹீரோ மோட்டோகார்ப் மேலும் பல சாதனைகளை படைக்கும் என நம்பலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்பிளெண்டர் மற்றும் பேஷன் ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களுக்கே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக புதிய பைக்குகளின் ஆன் ரோடு விலை உயர்ந்துள்ளது.
அப்படி இருந்தும் கூட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 7,69,138 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.