Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹோண்டா என்எச்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக் இந்தியா வருகிறது!!
ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் ரேஸ் பைக்குகளை வைத்து புதிய பைக் பந்தயங்களையும் நடத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இளம் பைக் பந்தய வீரர்களுக்கு இந்த பைக் பந்தயமும், இந்த பைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும்
மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கான சந்தை என்ற பிம்பத்தை இந்தியா மெல்ல உடைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிரிமியம் பைக்குகளுக்கான மார்க்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தற்போது ரேஸ் பைக்குகளுக்கான வரவேற்பும், ஆதரமும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எச்பி4 ரேஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது ஹோண்டா நிறுவனமும் தனது என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 ரேஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் ரேஸ் பைக்குகளை வைத்து புதிய பைக் பந்தயங்களையும் நடத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இளம் பைக் பந்தய வீரர்களுக்கு இந்த பைக் பந்தயமும், இந்த பைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்த ரேஸ்களில் திறமைமிக்க வீரர்களை இனம் கண்டு சர்வதேச அளவிலான கிரான்ட் பிரிக்ஸ் பைக் பந்தயங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக அமைய இருக்கிறது. இந்த பந்தயங்களுக்காக கொண்டு வரப்படும் ஹோண்டா என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக் மிக விசேஷமான வடிவமைப்பு தாத்பரியங்களை பெற்றிருக்கிறது.
இந்த பைக்கில் 249.3சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் 80 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. ஹோண்டா ரேஸிங் கார்ப்பரேஷன் பிரிவு இந்த பைக்கை தயாரித்துள்ளது. இந்த பைக் ஹோண்டா ஆர்எஸ் 125ஆர் பைக்கிற்கு மாற்றாக வருகிறது.
சர்வதேச கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயங்களில் ஹோண்டா நிறுவனம் 750 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், தேசிய மற்றும் சர்வதேச கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்திய அளவில் 3 அணிகளை ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
முதலாவது ஹோண்டா ஏசியா ட்ரீம் அணியானது ஜப்பானில் நடைபெறும் சுஸுகா 8 ஹவர்ஸ் என்டியூரன்ஸ் ரேஸிலும், ஜேஎஸ்பி100 கிளாஸ் ரேஸ்களிலும் பங்கேற்கும். இரணடாவது அணியான இடிமிட்சு ஹோண்டா டீம் ஏசியா அணியானது மோட்டோ2 மற்றும் மோட்டோ3 கிளாஸ் எஃப்ஐஎம் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிஃப் போட்டிகளில் பங்கேற்கும். இந்த அணியானது கிரான்ட் பிரிக்ஸ் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் விதமாக அமையும். மூன்றாவது அணியான ஹோண்டா இந்தியா ட்ரீம்ஸ் அணி, இந்தியா சார்பில் பங்கேற்கும் அணியாக இருக்கும்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2008ம் ஆண்டு முதலே இந்திய மோட்டார்ஸ்போர்ட் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. 2008ல் ஹோண்டா ஒன் மேக் ரேஸிங் சீரிஸ் போட்டிகளை துவங்கியது. இந்த நிலையில், அண்மையில் இளம் வீரர்களை இனம் காணும் விதத்தில் 'ஹோண்டா இந்தியா டேலன்ட் ஹன்ட்' என்ற முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் தேர்வு செய்யப்படும் இளம் வீரர்கள் ஹோண்டா ரேஸிங் அகடமி மூலமாக பயிற்சி கொடுக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பர்
இந்த நிலையில், என்எஸ்எஃப் 250ஆர் மோட்டோ3 பைக்கை அடுத்த ஆண்டு இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், இந்த பைக்குகளை வைத்து தேசிய அளவிலான புதிய பைக் பந்தயத்தையும் துவங்க இருக்கிறது. இந்த போட்டி மூலமாக, கிரான்ட் பிரிக்ஸ் போட்டிகளில் திறமையான இந்திய வீரர்கள் எளிதாக பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!