Just In
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 4 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- News வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனியின் அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...
நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் இன்று திறக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு வித்தியாசமான முறையில் ஒரு செக் வைக்கப்பட்டுள்ளதுதான்.
நாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் இன்று திறக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு வித்தியாசமான முறையில் ஒரு செக் வைக்கப்பட்டுள்ளதுதான்.
1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஜாவா பைக்குகளின் உற்பத்தி இடையில் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டது. இதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாவா பைக்குகள் இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட்டன.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா, ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து தொடங்கியுள்ள கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் முயற்சியால்தான் ஜாவா பைக்குகள் இந்தியாவிற்கு மீண்டும் வந்தன.
தற்போது ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று பைக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டபோது, டிசம்பர் 5ம் தேதிக்குள்ளாக ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சற்றே தாமதமாக இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப்கள் இன்று (டிசம்பர் 15) திறக்கப்பட்டுள்ளன. அதுவும் இரண்டு டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டிருப்பது, ஜாவா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப் அமையப்பெற்ற நகரம் என்ற பெருமையை புனே பெறுகிறது. புனேவின் புறநகர் பகுதிகளான பனேர் மற்றும் சின்ச்வாத் ஆகிய இடங்களில் ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த டீலர்ஷிப்களின் பெயர் சக்தி ஆட்டோமொபைல்ஸ் மற்றும் என்எஸ்ஜி ஜாவா. இதில், பனேரில் உள்ள ஜாவா டீலர்ஷிப்பானது, மெயின் ரோட்டிற்கு அருகிலேயே உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், அதே கட்டிடத்தில் ராயல் என்பீல்டு டீலர்ஷிப்பும் அமைந்திருப்பதுதான். ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களை திறக்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு செக் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களை திறக்க திட்டமிடப்பட்டிருப்பது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் ஏற்கனவே செய்தியும் வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனிடையே Road Side Assistance சேவையையும் ஜாவா டீலர்ஷிப் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சேவையில் ஈடுபடும் வேனிற்கு, ஜாவாவின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முடிவதற்குள்ளாக 60 ஜாவா டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக இந்த எண்ணிக்கை 105ஆக உயர்த்தப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஜாவா 42 பைக் ரூ.1.55 லட்சம், ஜாவா பைக் ரூ.1.64 லட்சம், ஜாவா பெராக் பைக் ரூ.1.89 லட்சம் என்ற ஆரம்ப விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாகதான் ஜாவா பைக்குகள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதனால் வருங்காலங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கணிசமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனைக்குதான் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!