Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர். இந்த வரிசையில் இரண்டாவதாக ஒரு ராயல் என்பீல்டு பைக், தற்போது குப்பை மேட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உறவு, முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் விதத்தில், இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இந்தியாவில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெறுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.62 லட்சம் மட்டுமே.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்திருப்பது, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்டுதான் பெகாசஸ் 500 எடிசன் மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியது. WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை, இங்கிலாந்து நாட்டு வீரர்கள், போர் முனையில் பயன்படுத்தினர்.
உலகம் முழுவதும் 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு 250 மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கப்பட்டன. எனவே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை சொந்தமாக்க கடும் போட்டி நிலவியது.
பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும், வெறும் 178 வினாடிகளில் விற்று தீர்ந்தன. இது ஒரு புதிய சாதனையாக கருதப்பட்டது.
பெகாசஸ் 500 எடிசனின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் (ஆன்ரோடு ரூ.2.65 லட்சம்). இது லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. வேறு எந்த மோட்டார் சைக்கிள்களிலும் இல்லாத பிரத்யேகமான அம்சங்கள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் கூறியது.
ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த அடுத்த சில வாரங்களிலேயே கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்துவிட்டது. இங்கேதான் பிரச்னை தொடங்கியது.
கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளானது கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளை போன்றே உள்ளது. இதனால் 'தனித்துவம்', 'பிரத்யேகம்' என்ற வார்த்தைகளை கூறி ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெகாசஸ் 500 உரிமையாளர்கள் தெரிவிக்க தொடங்கினர்.
இத்தனைக்கும் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளுடன் ஒப்பிடுகையில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம். அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி கிடையாது. அதுவும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 250 பைக்குகளில் மட்டும்தான் ஏபிஎஸ் கிடையாது. வெளிநாடுகளில் விற்பனையான எஞ்சிய 750 மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர். தங்களை ஏமாற்றிய ராயல் என்பீல்டு நிறுவனத்தை அவமதிக்கும் விதமாக, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை, உள்ளூர் நகராட்சி அமைப்புகளின் குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.
இந்த சூழலில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை, அதன் உரிமையாளர் ஒருவர் குப்பையில் வீசினார். இந்த புகைப்படங்கள் நேற்று முன் தினம், சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெகாசஸ் 500 எடிசன் தற்போது குப்பையில் வீசப்பட்டுள்ளது.
நொய்டாவை சேர்ந்த உரிமையாளர்கள் ஒருவர்தான், இதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 2 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களும் உண்மையிலேயே குப்பையில் வீசப்பட்டதா? அல்லது வெறுமனே புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் இப்படி செய்தனரா? என்பது உறுதியாகவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன்,க்ளவ்லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்பீல்டுக்கு கடும் போட்டியை வழங்க முடிவு செய்திருக்கும் சூழலில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.