Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. ரூ.15 ஆயிரம் பரிசு கொடுக்க காரணம் இதுதான்
ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இரண்டாம் உலக போர் நடைபெற்ற சமயத்தில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ வீரர்களுக்காக, WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் தயார் செய்து வழங்கியது. இந்த மோட்டார் சைக்கிள்கள் போர் முனையில் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போரில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ வீரர்களால் உபயோகிக்கப்பட்ட WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை அடிப்படையாக கொண்ட பாரம்பரியமான டிசைன் அம்சங்கள் அனைத்தும், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களிலும் இடம்பெற்றிருந்தன. எனவே கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
ஆனால் உலகம் முழுவதும் வெறும் 1,000 கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்டது 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே.
கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும் 178 வினாடிகளில் விற்று தீர, புதிய சாதனை படைக்கப்பட்டது.
ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்ட சுமார் 30 நாட்களில், அதாவது கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்கள், தோற்றத்தில் கிட்டத்தட்ட கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் போலவே உள்ளன. அத்துடன் கூடுதல் சிறப்பம்சமாக, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டிருந்தது.
பொதுவாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களில் மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கி வந்தது. அந்த விதியை மாற்றிய முதல் மோட்டார் சைக்கிள் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன்தான்.
ஆம், ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமை கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனையே சாரும். இப்படி பல சிறப்புகள் வாய்ந்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக், ரூ.1.62 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் எக்ஸ் ஷோரூம் விலையோ ரூ.2.40 லட்சம். போதாக்குறைக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளில், ஏபிஎஸ் வேறு இல்லை (ஆனால் வெளிநாடுகளில் விற்பனையான 750 பைக்குகளில் ஏபிஎஸ் இருந்தது).
கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை காட்டிலும், பெகாசஸ் 500 எடிசன் பைக்குகளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம். ஆனால் இரண்டு பைக்குகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.
இதுதவிர சுமார் 80 ஆயிரம் ரூபாய் குறைவான விலை கொண்ட கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்கில், ஏபிஎஸ் பிரேக் வசதி வேறு இருந்தது. ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லை.
அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்குகள் 'லிமிடெட் எடிசன்' மாடலும் கிடையாது. வழக்கமான மாடலாகவே அது விற்பனையாகிறது. ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக், வெறும் 250 என்ற எண்ணிக்கையில், லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
இத்தகைய காரணங்களால், ராயல் என்பீல்டு நிறுவனம் மீது கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர். ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்க தொடங்கினர்.
இதில் ஒரு சிலர் தங்களின் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டது.
அத்துடன் ஒரு சிலர், ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களில் தங்களது கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு வந்து விட்டனர். மற்றும் சிலரோ இந்த பைக்கை டெலிவரி எடுக்கவே முன்வரவில்லை.
எனவே கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை திருப்திபடுத்துவதற்காக, ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன்மூலமாக தற்போது இந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் விருப்பம் இல்லாவிட்டால், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளை, டீலர்ஷிப்களில் கொடுத்து விட்டு, அதற்குரிய முழு பணத்தையும் உடனடியாக பெற்று கொள்ளலாம் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது.
இல்லாவிட்டால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளை ஒப்படைத்து விட்டு, எக்ஸ்சேஞ்ச் முறையில், அதற்கு பதிலாக வேறு ராயல் என்பீல்டு பைக்கை தேர்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில், இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளும் அடக்கம்.
இதன்மூலம் பெரும்பாலான கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து அதிருப்தியில்தான் இருந்து வருகின்றனர். தற்போது அவர்களையும் குதூகலப்படுத்தும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கி விட்டது.
அதாவது அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்களின் வீடுகளுக்கும், இலவசமாக பெகாசஸ் ஜாக்கெட், பெகாசஸ் பேக், பிரத்யேக பெகாசஸ் ஹெல்மெட் ஆகியவற்றை அனுப்பி வைக்கும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கியுள்ளது.
கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க்கில், ஒவ்வொரு பைக்கிற்கும் பிரத்யேகமான எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த எண், ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வழங்கவுள்ள ஹெல்மெட்டிலும் இடம்பெற்றிருக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
நீங்கள் மேலே பார்த்த புகைப்படத்தை, ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இ மெயில் மூலமாக, அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த இ மெயிலுக்கு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பதில் அளிக்க வேண்டும்.
இதில், ஜாக்கெட் அளவையும் குறிப்பிட வேண்டும். இதன்பின்பு மேலே குறிப்பிட்ட பரிசுகள் அனைத்தும், அவர்களின் வீட்டிற்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 15 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இ மெயில் கிடைக்கப்பெறாத நபர்கள், அருகே உள்ள ராயல் என்பீல்டு நிறுவன டீலர்ஷிப்பை அணுகலாம். அல்லது வாடிக்கையாளர் சேவை எண் மூலம் நேரடியாக ராயல் என்பீல்டு நிறுவனத்தையே தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோபத்தில் இருந்த அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் உரிமையாளர்களும் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. சூழ்நிலையை ராயல் என்பீல்டு நிறுவனம் சிறப்பாக கையாண்ட விதம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை, ராயல் என்பீல்டு எப்படியெல்லாம் ஏமாற்றியது என்பது தொடர்பாக, அனுஜ் சிங் என்ற ஒரு உரிமையாளர் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் கூட தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விட்டார். புதிய வீடியோ ஒன்றை அனுஜ் சிங் தற்போது வெளியிட்டுள்ளார். வழக்கமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தை வசை பாடும் அவர், தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய பிரச்னையை, ராயல் என்பீல்டு நிறுவனம் திறமையாக கையாண்டு, கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. தற்போது அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலமாக உள்ள தற்போது, அவர்களை பரிசு மழையில் நனைவித்து கொண்டிருக்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு