Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தரமில்லாத ஹெல்மெட் விற்றால் 2 ஆண்டு சிறை ; மத்திய அரசு அதிரடி
தரமில்லா ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றம் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ்தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவு
தரமில்லாத ஹெல்மெட்களை விற்றால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் ஹெல்மெட்கள் எல்லாம் பிஐஎஸ் அளித்த விதிமுறையின் கீழ் தான் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலத்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் தான் ஹெல்மெட் தயாரிப்பின் விதிமுறைகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய சாலைபேக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி டூவீலருக்கான தயாரிக்கப்படும் ஹெல்மெட்களில் ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை தயாரிக்கவோ, ஸ்டாக் வைக்கவோ, விற்கவோ கூடாது என்று அறிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது 2 லட்சம் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தான் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டுஸ் (BIS) சார்பில் ஹெல்மெட் தயாரிப்பு குறித்த சில விதிமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிஐஎஸ் செய்யத விதிமுறை மாற்றத்தின் படி டூவீலர்களுக்காக தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் அதிகபட்ச எடையை 1.2 கிலோவாக குறைந்தது. முன்னர் இதன் அதிகபட்ச எடையாக 1.5 கிலோ என இருந்தது.
தற்போது உள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது விற்கப்படும் அனைத்து ஹெல்மெட்களும் பிஐஎஸ் தரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் எல்லாம் எவ்வளவு தாக்கத்தை தாங்குகிறது என்பது டெஸ்ட் செய்யப்படுகிறது. இந்த டெஸ்ட் பல்வேறு வெப்ப சூழ்நிலைகளிலும், ஈரப்பத சூழ்நிலையிலும் டெஸ்ட் செய்யப்படுகிறது.
இதில் தாக்கத்தை தாங்கும் திறன். நீடித்து உழைக்கும் திறன், உராய்வின் போது எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் திறன். விபத்தில் போது ஹெல்மெட் எளிதாக கழண்டு செல்ல வாய்ப்புள்ளதா என்பதை அறியும் டெஸ்ட். ஆகியன பரிசோதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பெரும்பகுதியில் ரோட்டோரங்களில் தரம் இல்லாத ஹெல்மெட்களின் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஹெல்மெட்களும் அதிகமாக மக்கள் மத்தியில் வாங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டிராபிக் போலீசிடம் இருந்து ஹெல்மெட் போடாமல் சென்றால் போடப்படும் அபராதத்தில் இருந்து தப்பிக்க இதை மக்கள் செய்து வருகின்றனர்
இது குறித்து ஆசியாவின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் பேர்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் கபூர் கூறுகையில் :" அரசின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. ஐஎஸ்ஐ தரம் இல்லாத ஹெல்மெட்களை மார்கெட்டில் இருந்து நீக்க இது சிறப்பான நடவடிக்கை தான்.
தற்போது பெரிய பெரிய நிறுவனங்கள் சிலர் ஹெல்மெட்களை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். அவர்களும் இனி ஐஎஸ்ஐ தரத்திற்கு உட்பட்டே ஹெல்மெட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்." இவ்வாறு கூறினார்.
விலை குறைந்த ஹெல்மெட்கள் மட்டும் அல்ல விலை உயர்ந்த சில ரக ஹெல்மெட்களும் ஐஎஸ்ஐ தரத்தை உறுதி செய்யவில்லை. நீங்கள் தற்போது ஹெல்மெட் வாங்குகிறீர்கள் என்றால் ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட்டை வாங்குகிறீர்களா என்பதை ஆய்வு செய்து பின் வாங்குங்கள்.நீங்கள் வாங்கும் ஹெல்மெட்டில் கூர்மையான பாகங்கள், ஊசி போன்ற வடிவம் இருந்தால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும் எச்சரிக்கை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?