Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்பட 10 மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள்தான், மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. கேரள மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1924ம் ஆண்டுக்கு பிறகு, கேரள மாநிலம் எதிர்கொள்ளும் 2வது மிகப்பெரிய வெள்ள பேரிடராக இது கருதப்படுகிறது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதத்தை சரி செய்ய வசதியாக, அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர், நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த பட்டியலில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் இணைந்துள்ளது. கேரள முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலை, கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சமூக பிரிவான சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட்டின் (SST) தலைமை செயல் அதிகாரி ஸ்வரன் சிங், கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து ஸ்வரன் சிங் கூறுகையில், ''கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருபவர்களுக்கு உதவுவதுதான் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நோக்கம். கேரள மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். அங்கு நிலைமை வெகு விரைவில் சீராகும்'' என்றார்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிவாரண நிதி வழங்குவது இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!