Just In
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 6 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 11 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், போக்குவரத்து போலீசார் 2 பேரை, குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர், ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், போக்குவரத்து போலீசார் 2 பேரை, குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர், ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலக அளவில் சாலை விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு நிகழும் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இது தவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களே விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அப்படி இருந்தும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரி வர கடைபிடிப்பது இல்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் கர்நாடக மாநிலம் தாவனகெரே பகுதியில், நேற்று (அக்.10) மதியம் சுமார் 12 மணியளவில், போக்குவரத்து போலீசார் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 260 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது.
அப்போது வக்கீலான ருத்ரப்பா என்பவர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். பின்னர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என ருத்ரப்பாவிடம் கேள்வி எழுப்பினர்.
ஆனால் ருத்ரப்பா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாருக்கு உரிய பதில் அளிக்காமல், ருத்ரப்பா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ருத்ரப்பா, போக்குவரத்து போலீசார் இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கினார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறியது. முதலில் ஓடு ஒன்றை எடுத்து, போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் நெற்றியில் ருத்ரப்பா தாக்கினார். இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரின் நெற்றியில் ரத்தம் வழிந்தது.
பின்னர் மற்றொரு போலீஸ்காரை அப்படியே சாலையில் தள்ளி புரட்டி எடுத்தார் ருத்ரப்பா. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு திரண்ட சிலர் முழு சம்பவத்தையும் அப்படியே தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அதிர்ச்சிகரமான அந்த வீடியோ காட்சி பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ANI வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
|
இந்த சூழலில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய வக்கீல் ருத்ரப்பா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் போலீசாரை கண்டாலே வாகன ஓட்டிகள் தலை தெறிக்க ஓடுகின்றனர். அதற்கு மாறாக குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர் போக்குவரத்து போலீசாரை புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துக்களில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம்.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!