Just In
- 54 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யமஹா..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு என கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், கேரள மாநிலத்திற்கு நிதி உதவி அளித்துள்ளன. பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக கேரள மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாகனங்களும், வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ளன. எனவே கேரள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும், சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளன.
இந்த வரிசையில் யமஹா நிறுவனமும் இணைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யமஹா நிறுவன இரு சக்கர வாகனங்களை சரி செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான லேபர் சார்ஜ் 100 சதவீதம் இலவசம். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட யமஹா சர்வீஸ் சென்டர்களிலும், இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் கேரளாவில் உள்ள யமஹா வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும், வரிசையாக கேரள மக்களுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் 3 கோடி ரூபாயும், டிவிஎஸ் நிறுவனம் 1 கோடி ரூபாயும், கேரளாவிற்கு நன்கொடையாக வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு