Just In
- 47 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?
ரூ. 11.95 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர ரக பைக்கை பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ எஃப்750 ஜிஎஸ் மாடல் இருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றாகும். இதன் விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 11.95 லட்சம் ஆகும். இது ஆரம்பநிலை மாடலின் விலையாகும். இந்த மாடலின் டாப் மாடலின் ரூ. 13 லட்சத்திற்கும் அதிமாக உள்ளது.
இந்நிலையில், இந்த பைக்கின் ஆரம்பநிலை மாடலான பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் இருசக்கர வாகனத்தை பிரபல பாலிவுட் திரைப்பட உலகின் புதிய நட்சத்திரமாக திகழும் அர்ஷத் வர்ஷி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவின்படி, அவர் கடந்த நவம்பர் 23ம் தேதி அதிக விலைக் கொண்ட பைக்கை வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைச் செய்யும் சிறிய மாடல்களில் இரண்டாவது இடத்தை எம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஜி 310 ஜிஎஸ் பைக் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேசமயம், இந்த பைக் ஐகானிக் மாடலான ஆர் 1250 மாடலைப் போல மிகவும் ஃபிரண்ட்லியான மாடலாக தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த பைக்கில் 853சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதே எஞ்ஜின்தான் எஃப் 850ஜிஎஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எஞ்ஜின் இரு பைக்குகளிலும் வெவ்வேறு விதமான திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ட்யூன் அப்பைப் பெற்றிருக்கின்றது.
ஆகையால், எஃப் 750 ஜிஎஸ் பைக் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை மட்டுமே வெளிப்படுத்துகின்ற வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது. மேலும், என்எம் டார்க்கைப் பொறுத்தவரை 83 அளவு வரை வெளிப்படுத்துகின்றது.
எஞ்ஜின் திறன் மட்டுமின்றி பைக்கை பிரிமியமாக காட்சிப்படுத்துகின்ற வகையிலான பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றது. அந்தவகையில், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக பைக்கின் முன் பக்க வீலில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளுகின்ற வகையிலான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் எலக்ட்ரானிக் டேம்பிங் மற்றும் உயரத்தை கன்ட்ரோல் செய்யக்கூடிய வகையிலான மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், தொழில்நுட்ப வசதியாக டிஎஃப்டி டிஸ்பிளே வசதி மற்றும் ப்ளூடூத் அம்சம் அடங்கிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் நேவிகேஷன், இசை மற்றும் அழைப்புகள் போன்ற பல்வேறு வசதிகளை நம்மால் பெற முடியும்.
தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இரு ரைடிங் மோடுகள், எல்இடி மின் விளக்கு, எல்இடி பகல்நேர மின் விளக்கு மற்றும் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக்கில் காணப்படுகின்றது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!