Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?
அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அருகியுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா நிறுவனத்தின் இரண்டு புதிய 150சிசி பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஒன்று ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், மற்றொன்று நேக்கட் ரக மாடலாகவும் இருந்தன.
எனினும், அந்த இரண்டு பைக் மாடல்களும் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக தெரிவிக்கப்பட்டது. அப்படியே வந்தாலும், அதற்கு நீண்ட வருட காத்திருப்பு தேவை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவாவில் அப்ரிலியா நிறுவனத்தின் இந்திய டீலர்களுக்கான ஆண்டு கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அப்ரிலியா நிறுவனத்தின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் டீலர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன.
அதில், புதிய 150சிசி ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஆர்எஸ்150 என்ற ஸ்போர்ட்ஸ் பைக் மாடலுக்கும் இந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலுக்கும் வேறுபாடுகள் இருந்தன.
டீலர்களுக்கான கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலானது சீனாவில் விற்பனை செய்யப்ப்டும் ஸோங்சென் ஜிபிஆர் 150 பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது. எனினும், முழுமையான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலிலில் இருந்து இந்தியாவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் பல விதங்களில் வேற்றுமைகளை கொண்டுள்ளது.
பெட்ரோல் டேங்க், இருக்கை அமைப்பு மற்றும் வால் பகுதி வடிவமைப்புகளில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. அதாவது, பழைய டிசைன் தாத்பரியங்களை பெற்றிருப்பது சிறிய ஏமாற்றம் என்றாலும், அப்ரிலியா பிராண்டில் வரும் 150சிசி மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 150சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், குயிக் ஷிஃப்டர் வசதிகளும் ஆப்ஷனலாக வழங்கப்படலாம். 17 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்ரிலியா ஆர்எஸ்150 பைக் மாடல் இந்தியாவில் யமஹா ஆர்15 வி3.0 பைக் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். எனினும் விலை போட்டியாளர்களைவிட அதிகம் நிர்ணயிக்கப்படலாம். ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் வாய்ப்புள்ளது. இதனுடன் 150சிசி ரகத்தில் நேக்கட் ரக பைக் மாடலையும் அப்ரிலியா அறிமுகம் செய்யும் வாய்ப்புள்ளது.
Source: ZigWheels
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?