Just In
- 37 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பஜாஜ், யமஹா, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா 150சிசி பைக்!
அப்ரிலியா நிறுவனம் தனது புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை பஜாஜ், யமஹா, கேடிஎம் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
பியாஜியோ நிறுவனம் தனது முதல் 150சிசி இருசக்கர வாகனத்தை அப்ரிலியா பிராண்டில் வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, மூன்று மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனம் பஜாஜ், கேடிஎம், டிவிஎஸ் மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் 125சிசி முதல் 150சிசி திறனுடைய பைக்குகளை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது இந்த புத்தம் புதிய 150சிசி திறன்கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை பியாஜியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் 12 முதல் 15 மாதங்களுக்குள் இதனை விற்பனைக்கு அறிமுகமும் செய்ய உள்ளது.
அதன்படி, அப்ரிலியா ஆர்எஸ் 150 ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் டுவோனோ 150 ஸ்டிரீட் என்ற இரு மாடல்களை முன்னதாக அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு மாடல் பைக்குகளும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.
எனினும், இந்த இரண்டு பைக்குகளும் இந்தியாவில் அறிமுகமாக நீண்ட காலமாகும் என எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அறிமுகம் குறித்து அப்ரிலியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த இரு மாடல்களும் வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலில் இருந்து இந்தியாவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் சில வித்தியாசங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்ரிலியா பிராண்டில் வரும் 150சிசி மாடல் முதல் பைக் என்பதால் இந்த பைக்கின் மீது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 150சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 17Bhp பவரையும், 14Nm டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் எக்ஸ்-ஷோரூம் விலையில் 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அப்ரிலியா ஆர்எஸ்150 மாடல் பைக் இந்தியாவில் ஏற்கனவே கொடிக்கட்டிப் பறந்துக்கொண்டிருக்கும் பஜாஜ், யமஹா, கேடிஎம் ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு