Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...
சென்னையில் ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் இயங்கி வருகிறது. தொடங்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே இந்தியா முழுக்க கவனம் ஈர்த்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
தற்போதைய நிலையில் எஸ்340 மற்றும் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தமிழக தலைநகர் சென்னையில் தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை அமைத்து வருகிறது.
இவை ஏத்தர் க்ரிட் (Ather Grid) என அழைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் 50-55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களும் நடப்பு ஆண்டு இறுதி வரை ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்வதற்காக, ரெஸ்டாரெண்ட்கள், டெக் பார்க்குகள், மால்கள் மற்றும் ஜிம் நிர்வாகங்களுடன் ஏத்தர் எனர்ஜி கூட்டணி அமைத்துள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் ஏற்கனவே 7 ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. `ஃபோரம் விஜயா மால், அட்வொர்க்ஸ் மற்றும் பைக்ஸ் அண்ட் பர்கர்ஸ் உள்ளிட்ட இடங்களில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
ஏத்தர் க்ரிட் ஆப் மூலமாக, அருகே உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கண்டறிய முடியும். பெங்களூருக்கு அடுத்தபடியாக ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை பெறும் இரண்டாவது நகரம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர இந்தியா முழுக்க 6,500 சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டிற்குள் இந்த 6,500 சார்ஜிங் பாயிண்ட்களும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஏத்தர் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தற்போது பெங்களூர் நகரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சென்னையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
வரும் ஜூன் மாதம் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வருகைக்கு சென்னை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!