Just In
- 36 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனி அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...
சென்னையில் ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் இயங்கி வருகிறது. தொடங்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே இந்தியா முழுக்க கவனம் ஈர்த்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
தற்போதைய நிலையில் எஸ்340 மற்றும் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தமிழக தலைநகர் சென்னையில் தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை அமைத்து வருகிறது.
இவை ஏத்தர் க்ரிட் (Ather Grid) என அழைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் 50-55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களும் நடப்பு ஆண்டு இறுதி வரை ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்வதற்காக, ரெஸ்டாரெண்ட்கள், டெக் பார்க்குகள், மால்கள் மற்றும் ஜிம் நிர்வாகங்களுடன் ஏத்தர் எனர்ஜி கூட்டணி அமைத்துள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் ஏற்கனவே 7 ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. `ஃபோரம் விஜயா மால், அட்வொர்க்ஸ் மற்றும் பைக்ஸ் அண்ட் பர்கர்ஸ் உள்ளிட்ட இடங்களில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
ஏத்தர் க்ரிட் ஆப் மூலமாக, அருகே உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கண்டறிய முடியும். பெங்களூருக்கு அடுத்தபடியாக ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை பெறும் இரண்டாவது நகரம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர இந்தியா முழுக்க 6,500 சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டிற்குள் இந்த 6,500 சார்ஜிங் பாயிண்ட்களும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஏத்தர் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தற்போது பெங்களூர் நகரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சென்னையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
வரும் ஜூன் மாதம் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வருகைக்கு சென்னை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.