Just In
- 4 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!
இமயமலை சாகச பயணத்தின்போது மேலே முன்னேறிச் செல்ல முடியாமல் சிக்கி தவித்த பஜாஜ் பல்சர் பைக்கிற்கு இந்திய இராணுவ வீரர்கள் உதவி கரம் நீட்டியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
சாகச மற்றும் வாகன ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களில் ஒன்றாக இமயமலை இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான பைக்கர்கள் வந்து செல்லும் வழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள மலைச் சிகரங்கள் தெவிட்டாத, கண்களுக்கு குளிர்ச்சியான காட்சியளிக்கும் வகையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
இமயமலை மலைத்தொடரில் வாகனங்களில் சவாரி செய்வது பூங்காவில் நடை பழகுவதைப் போன்று இருப்பதில்லை. அவை, மிகவும் ஆபத்தான மற்றும் அதிக சவால்களைக் கொண்ட பாதையாக இருக்கின்றன.
உண்மையில், ஒரு சில நேரங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணராத முடியாத அளவிலான சிக்கல்களை அந்த பாதைகள் ஏற்படுத்துவிடும்.
இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் ஓர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதனை, ஃபுட்லூஸ் தேவ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இமயமலையில் சாகசம் பயணம் மேற்கொள்ளும் வகையில் இரு இளைஞர்கள் பைக்கில் சென்றனர். அதில், ஒருவரின் கையில் ஜாவா 42 பைக்கும், மற்றொருவரிடம் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கும் இருந்துள்ளது. இதில், பல்சர் பைக் மட்டும் மலையின் கரடு முரடான பாதையில் முன்னேற முடியாமல் சிக்கிக் கொண்டது.
அப்போது, அவ்வழியாக வந்த இந்திய இராணுவ வீரர்கள் சிலர், பைக் மேற்கொண்டு செல்லும் வகையில் உதவி செய்துள்ளனர்.
இமயமலையின் குறுக்காக சவாரி செய்ய விரும்பிய அவ்விரு பைக்கர்களும் லடாக் வழியாக பயணித்துள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட இவ்விருவர்களும், முன்பாக இமாச்சல பிரதேசத்தின் சாக் பாஸ் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இங்கிருந்து குறுகிய நேரத்தில் இமயமலையை சென்றடையும் விதமாக லடாக் பாதையைத் தேர்வு செய்தனர்.
அவ்வாறு, அந்த பாதையில் செல்லும்போதே சிக்கலைச் சந்தித்துள்ளனர். அந்த பயணத்தை அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல இன்னல்களை அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிகின்றது.
இதில், பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மட்டும் அதிகளவில் சவாலைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்தவகையில், பிடிமானம் இல்லாத கரடுமுரடான பாதையில் பயணிக்க சற்றே பஜாஜ் பல்சர் திணறியுள்ளது.
மேலும், மலைப் பாதை உயரமாக இருந்ததன் காரணத்தால் அந்த பைக்கால் சீறான இழுவை வேகத்தை அளிக்க முடியவில்லை. இதனால் அந்த பைக் முன்னேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்துள்ளது. ஆகையால், ஜாவா 42 பைக்கை வைத்திருந்த இளைஞரும், பஜாஜ் பல்சருக்கு உதவி புரிய களமிறங்குகின்றார்.
இருப்பினும், மலைப் பாதை மிகவும் மோசமாக இருந்ததன் காரணத்தால் அவர்களால் சிக்கலை சமாளிக்க முடியவில்லை.
அப்போது, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் குழுவாகச் சென்றுள்ளனர். அதில், ஒரு வீரர் மட்டும் தாமாக முன்வந்து இளைஞர்களுக்கு உதவி புரிகின்றார். வீரர் மற்றும் ஜாவா 42 வாகன ஓட்டி ஆகிய இருவரும் இணைந்து பல்சர் பைக்கை ஒரு தள்ளில் மீட்டு விடுகின்றனர்.
பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பைக் அங்கிருந்து முன்னேறி சென்றது. இதையடுத்து, அவர்கள் இருவரும் அந்த வீரருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்படுகின்றனர்.
பொதுவாக இமயமலை போன்ற கரடு முரடான சாலையில் பயணிக்க ஆஃப் ரோடு வாகனங்களை மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்தியாவில் ஆஃப் பயணங்களுக்கென தனியாக பிரத்யேக வசதியைக் கொண்ட பைக்குகள் ஏராளமாக கிடைக்கின்றன.
அண்மையில் ஹீரோ நிறுவனம், ஆஃப் ரோடு பயணத்திற்கான மலிவு விலை எக்ஸ்-பல்ஸ் பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இதேபோன்று, ராயல் என்பீல்டு நிறுவனம் பிரிமியம் வசதியுடன் இமாலயன் என்ற ஆஃப் ரோடு பைக்கை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.
இந்த பைக்குகள் ஆஃப் ரோடு மட்டுமின்றி அனைத்துவிதமான சாலைகளிலும் பயணிக்க உகந்ததாக இருக்கும். ஆனால், பல்சர் போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிலான பைக்குகள் கரடுமுரடான நிலப்பரப்பில் எந்தவித பயனையும் அளிக்காது. மாறாக, மேலே பார்த்ததைப் போன்று இக்கட்டான சூழ்நிலையைதான் அளிக்கும்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!