Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!
சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகளுக்கு புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
அண்மைக் காலமாக இந்திய வாகன சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால், பெருவாரியான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை கணிசமாக குறைத்து வருகின்றது. மேலும், தற்காலிகமாக பணியாற்றி வந்த ஊழியர்களையும் அந்தந்த நிறுவனங்கள் விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
ஒரு காலத்தில், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் வாகன சந்தையாக இருந்த இந்தியா, தற்போது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
அந்தவகையில், கடந்த மாதத்தில் மட்டும், டாடா மோட்டார்ஸ் 31 சதவீதமும், ஹோண்டா நிறுவனம் 48 சதவீதமும், மஹிந்திரா நிறுவனம் 16 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனம் 10 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இதனால், கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும், இதனை ஈடுகட்டும் விதமாக, ஆட்குறைப்பு நடவடிக்கையை அந்தந்த நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
இவ்வாறு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சரிவைக் கண்டு வந்தாலும், ஒரு சில நிறுவனங்கள், அதன் புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறமுகம் செய்து வருகின்றது.
அந்தவகையில், சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம், அண்மையில் அதன் நான்கு மாடல் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
அவ்வாறு, கடந்த மாதம் 19ம் தேதி சிஎஃப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வரிசையில் 300என்கே மற்றும் 650 என்கே மாடலையும், டூரிங் ரக மாடலில் 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய பைக்குகளும் களமிறக்கப்பட்டன.
இந்த நிறுவனம், பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்த நான்கு பைக்குகளையும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.
ரூ. 5000 ஆயிரம் என்ற முன் தொகையில் இந்த பைக்குகளுக்கான ப்ரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகின்றது. பைக்குகளை புக் செய்ய ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இணையதளத்தில் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.
சிஎஃப் மோட்டோ களமிறக்கியிருக்கும் நான்கு மாடல் பைக்குகளும் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடல்களாக இருக்கின்றன. இதன்கராணமாகவே, இந்தியாவில் அந்த குறிப்பிட்ட மாடல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது களமிறங்க உள்ள நான்கு மாடல் பைக்குகளின் பாகங்களும் சிகேடி வழியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை, ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிளாணட்டில் வைத்து அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது.
சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் பைக்குகளிலேயே, மலிவு விலை மாடலாக 300 என்கே இருக்கின்றது. அவ்வாறு, அதன் விலை ரூ. 2.29 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 650 என்கே பைக்கிற்கு ரூ. 3.99 லட்சமும், 650 எம்டி பைக்கிற்கு ரூ.4.99 லட்சமும், 650 ஜிடி பைக்கிற்கு ரூ. 5.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் மலிவு விலை மாடலான 300என்கே பைக்கில் 292.4 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த பைக்கில் பிரத்யேக வசதியாக ஸ்போர்ட் மற்றும் மழை என்ற இருவிதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நவீன மற்றும் தொழிற்நுட்ப வசதியாக 300 என்கே மாடலில், டிஎஃப்டி தரத்திலான அனைத்து நிறங்களையும் உள்ளடக்கிய வண்ணத் திரை, எல்இடி ரகத்திலான மின் விளக்குகள் மற்றும் ரியர் வீலுக்கான ஹஃகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து களமிறங்கும் 650 என்கே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய மூன்று பைக்குகளிலும் ஒரே திறன்கொண்ட எஞ்ஜினே காணப்படுகின்றது. ஆனால், அவற்றின் தோற்றம் மாறுபட்டு காணப்படுகின்றது.
ஆகையால், 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின்தான் மற்ற மூன்று மாடல் பைக்குகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இந்த எஞ்ஜின் ஒவ்வொரு மாடலிலும், வெவ்வேறு விதமான திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் அப்பைப் பெற்றுள்ளது.
அந்தவகையில், ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் களமிறங்கும் 650 என்கே பைக்கில், 61 எச்பி பவரையும், 56 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையிலும், 650 எம்டி பைக்கில், 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் அப் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 650 ஜிடி பைக்கில் 62.5 எச்பி பவரையும், 58.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் திறன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, புக்கிங் செய்யப்படும் பைக்குகள் அனைத்தும் வருகின்ற அக்டோபர் மாதத்தில் டெலிவரி செய்யப்பட இருப்பதாக, நான்கு பைக்குகளின் அறிமுகத்தின்போது சிஎஃப் மோட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், அடுத்த வருடமும் இதேபோன்று நான்கு புத்தம் புதிய மாடல் பைக்குகளையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!