Just In
- 40 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
சாலையில் ஓடி கொண்டிருந்த பைக் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே (Agra Expressway) சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேன் (Mobile Police Control Room Van) உடன் அவர்கள் சமீபத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பைக்கை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் கைக்குழந்தை ஒன்றும் இருந்தது.
பைக்கின் இரு பக்கமும் அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் இருந்தன. குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பைகள் அதிக அளவில் இருந்தன. அவை பைக்கின் லைசென்சரில் உரசி கொண்டிருந்தன. இந்த சூழலில் லைசென்சர் அதிகம் சூடானதால், பைகள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவனித்து விட்டனர்.
ஆனால் பைக்கில் சென்றவர்களுக்கு, பைகள் தீப்பற்றி எரிவது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த இளைஞர் பைக்கை தொடர்ந்து ஓட்டி சென்று கொண்டேயிருந்தார். விபரீதத்தை புரிந்து கொண்ட போலீசார், உடனடியாக பைக்கை சேஸ் செய்ய தொடங்கினர். வழி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எமர்ஜென்ஸி ஹூட்டரை (Emergency Hooter) ஆன் செய்து விட்டு, வெகு வேகமாக பைக்கை துரத்தினர்.
மற்ற வாகனங்களை ஓவர் டேக் செய்து விட்டு சென்றதன் காரணமாக, அடுத்த சில வினாடிகளில் பைக்கை பிடித்தனர். பின்னர் பைக்கில் லக்கேஜ்கள் தீப்பற்றி எரிவதால், பைக்கை நிறுத்தும்படி அதனை ஓட்டி சென்ற இளைஞருக்கு அவர்கள் சத்தமாக தெரிவித்தனர். அப்போதுதான் அந்த இளைஞருக்கு நடப்பதே தெரிந்தது. உடனே அவர் பைக்கை சாலையோரமாக நிறுத்தினார்.
பின்னர் தீ அணைப்பானுடன் பைக்கை நோக்கி ஓடிய போலீசார், தீப்பற்றி எரிந்த லக்கேஜ்களை பைக்கில் இருந்து அகற்றி விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அடுத்த சில வினாடிகளில் தீ அணைக்கப்பட்டு விட்டது. போலீசார் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால், பைக் முழுமைக்கும் தீ பரவி பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக அவ்வாறு நடக்கவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேனின் உள்ளே இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா திவாரி என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.
|
எந்தவொரு வாகனத்தின் லைசென்சர் என்றாலும், மிக வேகமாக சூடாகி விடும். லைசென்சர் வழியாக வெளியேறும் வெப்பமான வாயுக்கள், அதன் டெம்ப்ரேச்சரை எளிதில் அதிகரித்து விடுகின்றன. ஆனால் ஒரு சில சைலென்சர்களில், ஹூட் ஷீல்டு (Heat Shield) வழங்கப்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை இது குறைக்கிறது.
என்றாலும் ஹூட் ஷீல்டுகள் வெப்பத்தின் தாக்கத்தை முழுமையாக குறைத்து விடாது. ஓரளவிற்கு மட்டுமே குறைக்கும். எனவே எப்போதும் கவனமாக இருப்பதே நல்லது. ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்திற்கு சைலென்சர் சூடுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. சைலென்சர் சூடு காரணமாக லக்கேஜ்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை முறையாக வைத்து கொண்டு பயணிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. எனவே இனி இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை வைக்கும்போது கவனமாக இருங்கள். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க சேடில் பேக்குகளை (Saddlebags) பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிள்களுக்கு என பிரத்யேகமாக சேடில் பேக்குகள் உருவாக்கப்படுகின்றன. சேடில் பேக்குகளை பயன்படுத்தினால், சைலென்சரில் இருந்து போதுமான இடைவெளி கிடைக்கும். இதன் மூலம் லக்கேஜ் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் நீங்கும். இச்சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு இனி சேடில் பேக்குகளை பயன்படுத்த தொடங்குங்கள்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?