Just In
- 54 min ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 1 hr ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 2 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 3 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Movies Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஓவரோ ஓவருங்க
பாடல் கேட்டதற்காக விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளருடைய லைசென்ஸைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. இதற்கு அண்மைக் காலங்களாக சமூக வலைதளம் மற்றும் செய்தி என திரும்பி பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காணப்படும் அதிகபட்ச அபராத தொகை குறித்த தகவல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததில், குறிப்பிட்ட மாநில போலீஸார் தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர். நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத சூழலை உருவாக்கும் விதமாக மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில மாநிலங்களின் போலீஸார் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இருசக்கர வாகன ஓட்டியொருவர் பைக்கில் இசையைக் கேட்டதற்காக போலீஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராகவ் ப்ருதி. இவர், விலையுயர்ந்த சொகுசு ரக பைக்கான ஹார்லி டேவிட்சனின் ரோட்க்ளைட் பைக்கைப் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த பைக் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வகையில், சொகுசு கார்களில் இடம்பெறும் சில பிரிமியம் ரக வசதிகள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. அதில் முக்கியமானதாக, இசையை ஒலக்கின்ற வகையிலான ஸ்பீக்கர் இருக்கின்றது.
இதுவே, ராகவைப் போலீஸார் மடக்கி செல்லாண் வழங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ராகவ் இந்த பைக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிதான் வாங்கியுள்ளார். எனவே இது கடந்த ஒரு மாத காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், திலக் நகர் பகுதியில் அவர் சென்றுக் கொண்டிருந்தபோது, போலீஸர் அவரை மடக்கி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ராகவின் ஓட்டுநர் உரிமைத்தைப் போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு, ஏன் என்னை மடக்கி ஓட்டுநர் உரிமத்தைக் கேட்கிறீர்கள் என்று போலீஸாரிடம் ராகவ் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த போலீஸார், பைக்கில் இருந்க ஸ்பீக்கர் மற்றும் சேடில் பேக்குகளை (saddlebags) கை காட்டி, அவற்றை ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களாக குறிப்பிட்டனர். இதற்காகவே தாங்கள் மடக்கியதாகவும் காரணம் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்துபோன ராகவ், அது மாடிஃபை பொருட்கள் அல்ல என்றும், ஹார்லி நிறுவத்தின் பைக்கிலேயே பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்த வசதி என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், போலீஸார் அதனை ஏற்கவில்லை. இருப்பினும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் ரோட்க்ளைட் பைக்கின் வீடியோ ஆதாரத்தையும் காண்பித்துள்ளார். ஆனால், இவையனைத்திற்கும் செவி சாய்க்காத திலக் நகர் போலீஸார், அதற்கான அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.
இதனால், விரக்தியடைந்த ராகவ், இதுகுறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், அவரது முகப்புத்தக பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளைஞருக்கு திலக் நகர் போக்குவரத்து காவல்நிலைய அதிகாரியின் தொடர்பு எண் கிடைத்துள்ளது. ஆனால், ராகவின் அழைப்பிற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதற்கு முன்பாக பல முறை இ-மெயில் மற்றும் நேரடி வருகை என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவையனைத்திற்கும் பலனில்லை என்று கூறப்படுகின்றது.
ஹார்லி டேவிட்சனின் 2019 ரோட்க்ளைட் மாடல் பைக்கை அவர் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். இதற்காக அவர் ஆன்ரோடு விலையாக ரூ. 40 லட்சம் வரை செலுத்தியுள்ளார். இந்த மோட்டார்சைக்கிளில், பூம் பாக்ஸ் ஜிடிஎஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 25 வாட் திறன் கொண்ட இரு ஸ்பீக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதுபோன்ற அம்சத்தை ஹார்லி டேவிட்சனின் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே பெற்றிருக்கின்றன. மேலும், இந்தியன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் சிலவும் பெற்றுள்ளன.
ஆனால், மோட்டார்சைக்களில் இந்த சிறப்பம்சம் இடம்பெற்றிருக்கும் காரணத்திற்காக அபராதத்தை வழங்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும்.
இதில், ராகவுக்கு மோட்டார் வாகன சட்டம் 102 மற்றும் 177 ஆகிய பிரிவுகளின்கீழ் அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. செல்லாண் வழங்கியது மட்டுமில்லாமல் அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான அபராதமாக போலீஸார் ரூ. 500 விதித்துள்ளனர்.
அபராதம் சிறிதாக இருந்தாலும், ராகவை போலீஸார்கள் மிகவும் கீழ் தரம் தாழ்த்தி நடத்தியதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற ஒரு சில காரணங்களால் தற்போது தனது போராட்டத்தை சமூக வலைதளத்தில் அவர் தொடங்கியுள்ளார்.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?