Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?
52 இ-செல்லாண்களுடன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த ஃபுட் டெலிவரி பாய் போக்குவரத்து போலீஸிடம் சிக்கியுள்ளார். அவர் எவ்வாறு, போலீஸிடம் சிக்கினார் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாள்தேறும் செய்திதாள்கள் மற்றும் நமது வீட்டு டிவிக்களில் ஒலிக்கும் செய்திகள் இருக்கின்றன.
அந்தவகையில், போக்குவரத்து விதிமீறலை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக, முன்னதாக விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை மத்திய அரசு பத்துமடங்கு உயர்த்தி அறிவித்தது. இதனால், ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவ் செய்தல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களின் அபராதம் பன் மடங்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும், தமிழ்நாட்டைக் காட்டிலும் மற்ற மாநில போலீஸார்கள் இந்த விவகாரத்தில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தமிழக போலீஸார் தற்போதுதான், போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
இதில், ஆரம்பகட்டத்திலிருந்தே வாகன சட்டம் விதிமீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதனை அதிதீவிரப்படுத்தவும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், முறையற்ற மற்றும் சேதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி வந்த வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமிரா மற்றும் போலீஸாரின் இ-செல்லாண் நடவடிக்கைக்கு பயந்து பலர், தங்களது நம்பர் பிளேட்டைச் சேதப்படுத்தி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆகையால், நம்பர் பிளேட் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த, வாகன ஓட்டிகளுக்கு எதிரான நடவடிக்கையை அம்மாநில போலீஸார் எடுத்து வருகின்றனர்.
அவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையால் வெறும் இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்தவகையில், அடையாளம் காணமுடியாத மற்றும் சேதப்பட்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதற்காக 940 பேர் மீதும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காகவ 363 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது, ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. பொதுவாக மோட்டார் வாகன விதிமீறலுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தநிலையில், அவர்கள்மீது குற்றப் பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடாக மாநிலம் பெங்களூருவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஃபுட் டெலிவரி பாய் ஒருவர் 52 இ-செல்லாண்களுடன் அபராதத்தைச் செலுத்தாமல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதுகுறித்த செய்தியை பெங்களூர் மிர்ரர்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர் எப்படி சிக்கினார், என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
பெங்களூருவைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இவர், கோரமங்களா வாட்டர் டேங்க் பகுதியில் ஃபுட் டெலிவரி பாயாக பணி புரிந்து வருகின்றார். அவ்வாறு, அவர் ஃபுட் டெலிவரி செய்யும்போது, பல முறை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு, அவர் ஒவ்வொரு முறையும் விதிமீறலில் ஈடுபட்டதற்காக போலீஸாரிடம் இருந்து இ-செல்லாணைப் பெற்றுள்ளார்.
அந்தவகையில், ஆனந்த் இதுவரை 52 செல்லாண்களைப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, 53வது முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது அவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அதாவது, 53வது முறையாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டபோது, அவர் போலீஸாரின் கண்களில் சிக்கியுள்ளார். அப்போது, அவருக்கு அபராதம் விதிக்கும் விதமாக, இ-செல்லாண் எந்திரத்தில், பைக்கின் பதிவெண்ணை உள்ளிட்டபோது, அவர்மீது ஏற்கனவே 52 இ-செல்லாண்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெங்களூரு கோரமங்களா போக்குவரத்து போலீஸார், அவருக்கு 53வது இ-செலாணை வழங்கும்போது, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது, இந்த புகைப்படம்தான், இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேசமயம், அவரின் நிலுவைத் தொகையாக ரூ. 5,300 இருப்பதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக தெலுங்கானா மாநிலத்திலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவத்தில், தமிழக பதிவெண் கொண்ட கார், ரூ. 1 லட்சம் அபராத நிலுவையுடன் சிக்கியது. பின்னர், அந்த காரைப் பறிமுதல் செய்த ஹைதராபாத் போலீஸார், ஓட்டுநரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!