Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை
புதிய இரு சக்கர வாகனங்களை பதிவு செய்வது தொடர்பாக அதிரடியான உத்தரவு ஒன்றை போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகமான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே இந்தியாவில் டூவீலர்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விதிமுறையையும் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய இரு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வேண்டுமானால், 2 புதிய ஹெல்மெட்களை வாங்கியதற்கான ரசீதை காட்ட வேண்டும்.
புதிய இரு சக்கர வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (RC-Registration Certificate) வழங்கும் முன்பாக, புதிய ஹெல்மெட்களை வாங்கியதற்கான ரசீதை அனைத்து ஆர்டிஓக்களும் சரிபார்க்க வேண்டும் எனவும் அம்மாநில போக்குவரத்து துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும்போதே இரண்டு புதிய ஹெல்மெட்களை வாங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக வாகன உற்பத்தியாளர்களுக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட்களை விற்பனை செய்ய வேண்டும்/வழங்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய பிரதேச மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்றதொரு உத்தரவு அங்கு கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது இந்த உத்தரவு பெரிதாக பின்பற்றப்படவில்லை. ஆனால் இம்முறை இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலமாக இரு சக்கர வாகன விபத்துக்களில் நிகழும் உயிரிழப்புகள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு அங்கு சாலை விபத்துக்களால் 235 பேர் உயிரிழந்திருந்தனர். 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 248ஆக உயர்ந்தது. அதன்பின் வந்த 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 252 என மேலும் அதிகரித்தது. கடந்த 2018ம் ஆண்டு அங்கு சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!