இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மக்களைக் கவரும் விதமாக தொடர் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றது. ஹீரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் போட்டி நிறுவனங்கள் கடும் அச்சத்தில் திகைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

கடந்த காலங்களில் உலகின் நம்பர் 1 வாகனத்துறை என்ற பெயரை சூடி வந்த இந்தியா தற்போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு துயரத்தில் சிக்கி தவித்து வருகின்றது.

அதிலும், 2019ம் ஆண்டு தொடங்கியது முதல், அது அதல பாதாளத்தில் மூழ்கி வருகின்றது. புதிய மாசு உமிழ்வு விதி, எரிபொருள் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்வு, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கின்றன.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

இத்துடன், அண்மைக் காலங்களாக மின்சாரம் சார்ந்த வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், தற்போதைய இந்தியா வாகனத்துறையின் படுமோசமான நிலைக்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், இத்தகைய சூழலில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

அந்தவகையில், பணியாட்கள் குறைப்பு, உற்பத்தி குறைப்பு, தற்காலிக உற்பத்தி ஆலை மூடல் உள்ளிட்ட பல அதிரடியில் அவை ஈடுபட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை அதிகரிக்கும் விதமான முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

இந்நிலையில், நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கவர்ச்சிகரமான சலுகையை, அதன் ஸ்கூட்டர்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த சலுகை திட்டத்திற்கு "ஹீரோ ஸ்கூட்டர் கிராண்ட் கார்னிவல்" என்ற பெயரை அது வைத்துள்ளது. மேலும், இச்சலுகை வருகின்ற 14ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

ஸ்கூட்டர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு சலுகை திட்டத்தில், புதிதாக ஹீரோ ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. அவை, ரூ. 999 என்ற முன் தொகையில் ஸ்கூட்டரை பெறுதல் மற்றும் குறைந்த அளவிலான 6.99 சதவீத வட்டி உள்ளிட்ட சலுகைகள் இதில் அடக்கம்.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

இத்துடன், கூடுதல் சிறப்பு சலுகையாக ரூ. 8,500 பேடிஎம் கணக்கில் கேஸ்பேக்காக அளிக்கவும் ஹீரோ திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்திய வாகனத்துறை சந்தித்து வரும் மந்த நிலையில், ஹீரோ நிறுவனமும் தப்பிக்கவில்லை. இதன்காரணமாகவே, இத்தகைய சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

மேலும், சந்தையில் நிலவி வரும் போட்டியின் காரணமாகவும், இச்சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. முன்னதாக, சமீபத்தில் இதேபோன்றதொரு சிறப்பு சலுகை திட்டத்தை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களுக்கு அறவித்திருந்தது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

அதில், எக்ஸ்சேஞ்ச், லாயல்டி மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகை என முன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழ், பழைய ஸ்கூட்டர் அல்லது பைக்கினை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் மதிப்பிற்குரிய தொகை புதிய ஸ்கூட்டரில் தள்ளுபடி செய்யப்படும். இத்துடன் கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியையும் அது வழங்கு உள்ளது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

இதேபோன்று, லாயல்டி திட்டத்தின்கீழ், ஏற்கனவே ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. தொடர்ந்து, ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது ட்யூவட், டெஸ்டினி 125, ப்ளெஸ்ஸர், ப்ளெஸ்ஸர் ப்ளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 எஃப்ஐ உள்ளிட்ட ஸ்கூட்டர்களை விற்பனை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மாடல் அனைத்திற்கும் ஹீரோ நிறுவனத்தின் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Hero Announces Special Offer For Scooters. Read In Tamil.
Story first published: Friday, August 30, 2019, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X