Just In
- 48 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!
விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை போராடி வரும் நிலையில், இந்தியாவின் மிக பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், வருகிற தீபாவளி பண்டிகையின்போது, தங்களது விற்பனை வளர்ச்சியை 10 சதவீதம் அதிகரிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை வெகுவாக குறைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த சலுகையும் ஹீரோ மோட்டார் நிறுவனம் தைரியமாக வரும் பண்டிக்கையில் முதலீடு செய்வதற்கு தூண்டுதலாக அமைவதாக கோவாவில் நடந்த இந்நிறுவனத்தின் டீலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற டீலர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் அதிகப்படியான சலுகைகளையும் இலவச திட்டங்களையும் வருகிற பண்டிகை நாட்களில் அள்ளி கொடுக்க விரும்பவில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பட்ஜெட் வாகனங்களையே விற்பனை செய்யவுள்ளோம். ஓரளவு கூடுதல் விற்பனை சதவீதம் அதிகரித்தாலே போதும்," என தெரிவித்தார்.
இதன் மூலம் ஹீரோ மோட்டார் நிறுவனம், பண்டிகை நாட்கள் முடிந்து 30 நாட்கள் கழித்து மீண்டும் பழைய இயல்பான விற்பனை நிலைக்கு வந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது போல தான் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில், "நாங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் முதலீடுகளை சில காலமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் வரும் நிதி ஆண்டில் மூன்று ப்ரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு ஸ்கூட்டர்கள் உள்பட ஐந்து புதிய தயாரிப்புகளை ஐந்து மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம்," என கூறினார்.
அந்த ஐந்து தயாரிப்புகள் என்னென்ன என்பதையும் கூறிய அவர், எக்ஸ்-பல்ஸ் ட்வின்ஸ், எக்ஸ்ட்ரீம் 200எஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125எஃப்ஐ, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் மற்றும் பிளஸர்+ 110 ஸ்கூட்டர் என்றார்.
மேலும், பிஎஸ்-விஐ மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என்பதையும் அவர் தெரிவித்தார். இந்த மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கலந்துகொண்டார்.
ஹீரோ மோட்டார் நிறுவனம் தான் முதன்முதலாக பிஎஸ்-6 சான்றிதழை ஆட்டோமோடிவ் டெக்னாலஜியின் இண்டர்நேஷனல் மையத்திடம் இருந்து வாங்கியது. மேலும் ஏற்கனவே சில டீலர்களுக்கு ஸ்ப்லெண்டோர் ஐ-ஸ்மார்ட் பைக்கையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!