Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!
பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் இந்தியாவின் முதல் பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக, வாகனங்களின் எஞ்சின்களை தரம் உயர்த்தும் பணிகளில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களை மேம்படுத்தி வருகிறது.
அதில், முதலாவதாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பைக்கில் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும். இதனால், எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுவதுடன், மாசு உமிழ்வும் குறையும்.
இந்த பைக்கில் தற்போது 109.15 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.98 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக்கில் கார்புரேட்டர் சிஸ்டத்துடனே வருமா அல்லது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் இந்த பைக்கில் இருக்காது என்றே தெரிகிறது.
ஆனால், பிஎஸ்-6 என்பதை குறிக்கும் விதத்தில், பாடி டீக்கெல்கள் அல்லது ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு அண்மையில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு ஐசிஏடி அமைப்பால் பிஎஸ்-6 சான்று வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சான்று கிடைத்ததும் உற்பத்திக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, கூடிய விரைவில் இந்த பைக் விற்பனைக்காக டீலர்களுக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த பைக் மாடலை தொடர்ந்து பிற இருசக்கர வாகனங்களையும் பிஎஸ்-6 எஞ்சினுடன் அறிமுகம் செய்வதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!