Just In
- 47 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...?
புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இயக்கி வந்த பெண்ணிற்கு உச்சபட்ச அபராதத்தை போக்குவரத்து போலீஸார் வழங்கியுள்ளனர் . இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் கடந்த 1ம் தேதி புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்கு ஒரு சில மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு காரணம், புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டிருக்கும் உச்சபட்ச அபராதமே.
ஆகையால், பெரும்பாலான மாநிலங்கள் புதிய அபராத திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஏன், பாஜக ஆளும் குஜராத் மாநிலமே இத்தகைய நடவடிக்கையில்தான் தற்போது களமிறங்கியுள்ளது.
மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.
ஆனால், புதிய மோட்டார் வாகன சட்டம் மிக மிக அதிகளவிலான அபராதத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், இதில் ஏழை எளியோரே அதிகம் பாதிப்பார்கள் என்றுகூறி மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சபட்ச அபராதத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை டெல்லி, ஹரியானா, ஒடிசா போன்ற சில மாநிலங்கள் அப்படியே நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
ஆகையால், அந்த மாநிலங்களில் இருந்து வெளிவரும் அபராதம் குறித்த செய்திகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.
இந்நிலையில், புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணிற்கு மிக மிக அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. முன்னதாகவும் இதேபோன்று அம்மாநில போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், விதிமீறலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதமாக ரூ. 6.53 லட்சத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில், முக்கியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்துகின்ற வகையில் அம்மாநில போலீஸார், ஓர் பெண்ணுக்கு ரூ. 1 லட்சத்திற்கான அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.
பொதுவாக, போலீஸார் பெண்களை மடக்கி ஆய்வு மேற்கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டு வந்தநிலையில், இத்தகைய அபராதத்தை வழங்கி அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்துள்ளனர் ஒடிசா மாநில போலீஸார்.
இச்சம்பவம், அம்மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் அபராதத்தைப் பெற்ற பெண்ணின் பெயர் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், போலீஸார் இந்த வழக்கில் பாட்டியா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் கிம்ஜி ஹோண்டா நிறுவனத்தின் மீதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது உச்சபட்ச அபராதத்தைப் பெற்றிருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் 28ம் தேதியே வாங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதை பதிவு செய்யாமல் அவர் இயக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி கட்டக் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், பதிவெண் இல்லாமல் வந்ததன் காரணத்தால் அப்பெண்ணை மடக்கியுள்ளனர். அதில், பல நாட்களாக பதிவு செய்யாமல் ஸ்கூட்டர் இயக்கப்பட்டு வந்தது.
ஆகையால், பதிவெண் இல்லாமல் ஸ்கூட்டரை பயன்பாட்டுக்கு வழங்கிய கிம்ஜி ஹோண்டா நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, உச்சபட்சமாக ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி, முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் புவனேஸ்வர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இத்துடன், ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒரு வாகனத்தை இயக்க வேண்டுமானால், அந்த வாகனம் பதிவெண், கப்பீடு மற்றும் மாசு சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதனை வாகனத்தை விற்பனைச் செய்யும் டீலர்களே வழங்க வேண்டும். இந்த விதி தற்போது உருவாக்கப்பட்டதல்ல, நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் ஓர் விதியாகும். ஆனால், பெரும்பாலான வாகன விற்பனை நிறுவனங்கள் இதனை கடைப்பிடிப்பதே இல்லை.
அதேசமயம், டீலர்கள் விற்பனைச் சான்று (Trade Certificates) என கூறப்படும் ஆவணத்தை வைத்து வாகனத்தை இயக்குகின்றனர். இது உள் அல்லது ஏற்றுமதி செய்யப்படும்போது மட்டுமே பயன்படுத்த உரியதாகும். மாறாக இதனை வேறெதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அப்படி வாகனம் பயன்படுத்தப்படுமேயானால், அதற்கு நிரந்தர அல்ல தற்காலிக பதிவெண் பொருத்தியிருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாகனத்திற்கான பதிவெண்ணை ஓரிரு நாட்களிலேயே பெற முடியும். புது டெல்லியில் வாகன பதிவெண்ணை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.