Just In
- 31 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 51 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!
அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், காத்திருப்பு காலம் ஓர் ஆண்டு வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் லாட்டில் 500 பைக்குகள் மட்டும் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, முதல் லாட் என்பது முதல் ஓர் ஆண்டிற்கான யூனிட்டுகளாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு கிடைத்துள்ளது. முதல் ஒரு மாதத்திலேயே 400 யூனிட்டுகளுக்கான முன்பதிவு முடிந்த நிலையில், தற்போது முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாம்.
தற்போது முதல் லாட்டில் முன்பதிவு செய்தவர்கள் இந்த பைக்கை டெலிவிரி பெறுவதற்கு அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், தொடர்ந்து முன்பதிவு பெறப்படுகிறது.
இப்படி இரண்டாவது லாட்டிற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு, காத்திருப்பு காலம் ஓர் ஆண்டு வரை நீள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கை டெலிவிரி பெறுவதற்கு ஓர் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, தாய்லாந்தில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வரவேற்பை கருத்தில்கொண்டு கூடுதல் யூனிட்டுகளை விரைவாக ஒதுக்கீடு செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் டீலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் டிசைன் மிகவும் தனித்துவமானது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கலந்து கட்டி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறு.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 27.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.
இந்த பைக் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோமோபியர் என இரண்டு வண்ணங்களில் கிடைடக்கிறது. ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் கிடைக்கிறது.