Just In
- 26 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 45 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது டிவிஎஸ் எக்ஸ்எல் கிடையாது... ஹோண்டாவின் புதிய சிடி 125 மொபட்... அறிமுக விபரம்!
டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மொபட்டுகளைப் போன்று ஹோண்டா நிறுவனம், சிடி 125 மொபட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நம்ம ஊரு கடைக்கார அண்ணாச்சிகளிடம் மிகவும் அதிகமாக புழக்கத்தில் இருந்த வாகனங்களில் பஜாஜ் எம்80 பைக் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இதன் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே இதன் புழக்கத்தை நம்மால் காண முடிகின்றது.
இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல், சேம்ப் உள்ளிட்ட மொபட்டுகள் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், மேற்கூறிய மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹோண்டா நிறுவனம் புதிய மொபட் ரகத்திலான இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மொபட்டிற்கு சிடி 125 என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. இதனை கான்செப்ட் மாடலாகவே ஹோண்டா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தற்போது 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இங்கு பல்வேறு புதிய ரகத்திலான வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஹோண்டா நிறுவனமும் கமர்சியலுக்கு பயன்படுத்தப்படும் சிடி 125 கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொபட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் கப் 125 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஹோண்டா சிடி 125 கான்செப்ட் மாடலில் சிறப்பம்சமாக அதன் சைலென்சர் காட்சியளிக்கின்றது. இது மொபட்டிற்கு ஸ்கிராம்ப்ளர் பைக்கைப் போன்ற காட்சியை வழங்குகின்றது. ஆகையால், ஹோண்டா சிடி 125 கமர்சியல் வாகனங்களைப் போன்று அல்லாமல், ஸ்போர்ட்ஸ் வாகனங்களைப் போன்று காட்சியளிக்கின்றது.
இதற்காகவே, இந்த மொபட்டில் ஸ்கிராம்ப்ளர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இது, மொபட்டிற்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை கொடுக்கின்றது.
இதுமட்டுமின்றி, ஹோண்டா சிடி 125 மொபட்டில் பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பிரேஸ்ட் ஹேண்டில்பார் மற்றும் ஹேண்டில் மவுண்டட் இன்டிகேட்டர் மின் விளக்கு உள்ளிட்டவை காணப்படுகின்றது.
தொடர்ந்து, பின் இருக்கைக்குப் பதிலாக சரக்கு ஏற்றிச் செல்லுகின்ற வகையிலான இரும்பு கேரியர் அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரடுமுரடான சாலையில் பயணிப்பதற்கு ஏற்ப சில வசதிகளையும் இந்த மொபட் பெறவருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கான்செப்ட் மாடல் சிடி 125 மொபட்டில் ஸ்போக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் பயன்படுத்தக்கூடிய டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, இதன் சஸ்பென்ஷனும் இருவித பயன்பாட்டிற்கு உதவுகின்ற வகையிலான சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றது.
அந்தவகையில், மொபட்டில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், இன்கார்பரேட் ஃபோர்க கெயிட்டர்ஸும் காணப்படுகின்றது. தொடர்ந்து பாதுகாப்பு வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபட்டில் 124 சிசி திறனை வெளிப்படுத்தும் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9.38 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த புதிய மொபட்டை எந்தெந்த சந்தையில், எப்போது களமிறக்கப்படும் என்ற தகவலை ஹோண்டா இன்னும் வெளிப்படுத்தவில்லை. மேலும், இதன் உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னரே இந்தியா போன்ற நாடுகளில் களமிறக்குவது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!