Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?
பிரபல ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான ஆக்டிவா மற்றும் சிபி ஷைன் ஆகிய இரு டூ வீலர்களுக்கும் சில சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் தொடங்கிய முதல் ஒரு சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து வருகின்றது.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், விலையில் தள்ளுபடி மற்றும் ஆச்சரிய பரிசு உள்ளிட்ட பல நன்மைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பிரபல ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, அதன் இரு புகழ்பெற்ற மாடல்களுக்கும் சிறப்பு சலுகையை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அடுத்த வருடம் அமலுக்கு வரவிருக்கும் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6தான் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு இதனை வருகின்ற 2020 ஆண்டு ஏப்ரல் மாத்தில் இருந்து கட்டாயமாக்கியுள்ளது. இதன்பின்னர், பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனைச் செய்வது குற்றமாகும்.
ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள பிஎஸ்-6 தரத்திற்கும் குறைவான வாகனங்களை சலுகை விலையில் விற்பனைச் செய்ய முடிவெடுத்துள்ளன.
இதனடிப்படையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அண்மைக் காலங்களாக சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
இதே நடவடிக்கையில்தான் ஹோண்டா நிறுவனமும் தற்போது களமிறங்கியுள்ளது. அந்த வகையில், அதன் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடலிற்கும், பைக்குகளில் ஷைன் மாடலுக்கும் சிறப்பு சலுகையை வழங்க இருக்கின்றது.
இந்த இரு மாடல்களும் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களாகும்.
இவற்றிற்கு சிறப்பு சலுகையாக குறைந்த அளவிலான முன் பணம், அதாவது வெறும் 1,100 மட்டுமே செலுத்தி ஹோண்டாவின் ஆக்டிவா அல்லது சிபி ஷைன் டூ வீலரை எடுத்துக் கொண்டு செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நோ காஸ்ட் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர கட்டணத்திற்கு பெறப்படும் கட்டணம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பெறப்படும் கட்டணம் உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்பட உள்ளது. இது வாகனத்தின் விலையை சற்றே குறைத்துவிடும்.
மேலும், வாடிக்கையாளர் கட்டணத்தை பேடிஎம் மூலமாக செலுத்தினால் ரூ. 7,000 ஆயிரத்திற்கான பணம் மீண்டும் அவர்களுக்கு பேடிஎம் வழியாகவே வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு சலுகை மேற்கூறிய இரு மாடல்களுக்கு மட்டுமின்றி கூடுதல் சில மாடல்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஹோண்டாவின் இருசக்கர வாகன தயாரிப்பை புதிதாக வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை திட்டம் குறித்த தகவலை டீலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஹோண்டா நிறுவனம், அதன் பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த தரத்தில் அறிமுகமான முதல் ஸ்கூட்டர் இதுவே ஆகும். இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்துவைத்தார்.
பிஎஸ்-6 தரத்திலான இந்த ஸ்கூட்டர் ப்யூவல் இன்ஜெக்சன் என்ற சிறப்பு தொழில்நுட்பத்தில் இயங்கும் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் அதிக மைலேஜ் மற்றும் குறைவான எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இயங்கும்.
ஆகையால், ஆக்டிவாவின் பழைய கார்புரேட்டர் எஞ்ஜின் வழங்கும் அதிகபட்ச எஞ்ஜின் திறன் 8.52 பிஎச்பி பவரைவிட புதிய ப்யூவல் இன்ஜெக்சன் திறன்கொண்ட எஞ்ஜின் 8.1 பிஎச்பி பவரை மட்டுமே வழங்குகின்றது. இது சற்றே குறைவாக இருந்தாலும் பழைய மாடலைக் காட்டிலும் 13 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறனை இது பெற்றுள்ளது. இதனால், புதிய மாடல் ஆக்டிவா அதிக மைலேஜை வழங்கும் மாடலாக மாறியுள்ளது.
இதுமட்டுமின்றி, ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 தர மாடலில் கூடுதல் சில சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இது மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ. 67,490ம், அலாய் வீல் வேரியண்ட் 70,990 ரூபாயும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ. 74,490 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
இந்த புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 தர ஸ்கூட்டர் வருகின்ற செப்டம்பர் 29ம் தேதி முதல் டெலிவரி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் நவராத்திரி பண்டிகை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையடுத்து நாடுமுழுவதும் பல கட்டங்களாக டெலிவிரி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!