Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...
ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஓட்டி வந்த இளைஞரை, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மடக்கி பிடித்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை நீங்கள் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்.
இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நெடுஞ்சாலைகளில் ஹாயாக ஒரு 'லாங் டிரிப்' அடித்து விட்டு வரலாம் என்ற ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில்தான் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிக பிரபலமாக திகழ்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ராயல் என்பீல்டு புல்லட்டை (Royal Enfield Bullet) கூறலாம்.
350 சிசி யூனிட் மற்றும் 500 சிசி யூனிட் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் ராயல் என்பீல்ட் புல்லட் விற்பனைக்கு வருகிறது. இதில், கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் புல்லட் 350 (Bullet 350) பைக்கில், 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,250 ஆர்பிஎம்மில் 19.8 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.
அதே சமயம் புல்லட் 500 (Bullet 500) பைக்கில், 499 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,100 ஆர்பிஎம்மில் 26.1 பிஎச்பி பவரையும், 3,800 ஆர்பிஎம்மில் 40.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 (Classic 500) மற்றும் தண்டர்பேர்டு 500 (Thunderbird 500) பைக்குகளுக்கு நிகராக புல்லட் 500 விற்பனையாவது கிடையாது.
ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் (Base Variant) விலை 1.17 லட்ச ரூபாய். அதே சமயம் புல்லட் 500 பைக்கின் பேஸ் வேரியண்ட்டினுடைய விலை 1.68 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் நம்பர் பிளேட் இல்லாமல் சாலைகளில் பயணிக்க எந்த மோட்டார் சைக்கிளுக்கும் அனுமதி கிடையாது.
அத்துடன் தகுதியான டிரைவிங் லைசென்ஸ் இல்லாத எவரும் வாகனங்களை இயக்கவும் கூடாது. ஆனால் இந்த இரண்டு விதிமுறைகளையும் கடைபிடிக்காத இளம் வாகன ஓட்டி ஒருவர், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் சிக்கி கொண்டார். சம்பவத்தன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
பொதுவாக வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் பதிவு எண்ணுடன் கூடிய தெளிவான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த இளைஞர் ஓட்டி வந்த புல்லட் 350 பைக்கின் இரு பக்கங்களிலும் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. இதனை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கவனித்து விட்டார். எனவே விசாரணை நடத்துவதற்காக அந்த இளைஞரை அவர் நிறுத்தினார்.
அப்போது இது புதிய மோட்டார் சைக்கிள் என்றும், ஆர்டிஓவால் முறையாக பதிவு செய்யப்படும் வரை பயன்படுத்துவதற்காக தற்காலிக பதிவு எண் (Temporary Registration Number) ஒன்றை பெற்றிருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த எண்ணையும் கூட அவர் தனது பைக்கில் குறிப்பிடவில்லை.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த இளைஞரிடம் டிரைவிங் லைசென்சும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. இதனால் அந்த இளைஞரின் சூழ்நிலை இன்னும் மோசமானது. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தான் புதிய டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், இன்னும் கைக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஆக மொத்தம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எவ்விதமான பதிவு எண்ணும் இல்லாமல் வாகனத்தை இயக்கியது என 2 விதிமீறல்களை அந்த இளைஞர் செய்து விட்டார். இதன் காரணமாக அவரது பைக் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.
பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற ஒரு விதியையாவது அவர் கடைபிடித்ததால், அவரது நிலைமை இன்னும் மோசமடைவது சற்று தவிர்க்கப்பட்டது. சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை The IAS Views யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் விதிமீறலாக உள்ளது. இங்கு உரிய வயதை எட்டும் முன்பாகவே பலர் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். சாலைகளில் அதனை கண் கூடாக பார்க்க முடியும்.
ஆனால் இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எதுவும் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் உரிய வயதை எட்டியும் டிரைவிங் லைசென்ஸ் வாங்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் இங்கு அதிகம். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வர இத்தகைய விதிமீறல் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதனை குறைக்க வேண்டும் என்றால், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. இல்லாவிட்டால் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து விடுவதற்கான அபாயம் உள்ளது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்