இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஓட்டி வந்த இளைஞரை, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மடக்கி பிடித்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை நீங்கள் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நெடுஞ்சாலைகளில் ஹாயாக ஒரு 'லாங் டிரிப்' அடித்து விட்டு வரலாம் என்ற ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில்தான் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிக பிரபலமாக திகழ்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ராயல் என்பீல்டு புல்லட்டை (Royal Enfield Bullet) கூறலாம்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

350 சிசி யூனிட் மற்றும் 500 சிசி யூனிட் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் ராயல் என்பீல்ட் புல்லட் விற்பனைக்கு வருகிறது. இதில், கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் புல்லட் 350 (Bullet 350) பைக்கில், 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,250 ஆர்பிஎம்மில் 19.8 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

அதே சமயம் புல்லட் 500 (Bullet 500) பைக்கில், 499 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,100 ஆர்பிஎம்மில் 26.1 பிஎச்பி பவரையும், 3,800 ஆர்பிஎம்மில் 40.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 (Classic 500) மற்றும் தண்டர்பேர்டு 500 (Thunderbird 500) பைக்குகளுக்கு நிகராக புல்லட் 500 விற்பனையாவது கிடையாது.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் (Base Variant) விலை 1.17 லட்ச ரூபாய். அதே சமயம் புல்லட் 500 பைக்கின் பேஸ் வேரியண்ட்டினுடைய விலை 1.68 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் நம்பர் பிளேட் இல்லாமல் சாலைகளில் பயணிக்க எந்த மோட்டார் சைக்கிளுக்கும் அனுமதி கிடையாது.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

அத்துடன் தகுதியான டிரைவிங் லைசென்ஸ் இல்லாத எவரும் வாகனங்களை இயக்கவும் கூடாது. ஆனால் இந்த இரண்டு விதிமுறைகளையும் கடைபிடிக்காத இளம் வாகன ஓட்டி ஒருவர், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் சிக்கி கொண்டார். சம்பவத்தன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

பொதுவாக வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் பதிவு எண்ணுடன் கூடிய தெளிவான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த இளைஞர் ஓட்டி வந்த புல்லட் 350 பைக்கின் இரு பக்கங்களிலும் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. இதனை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கவனித்து விட்டார். எனவே விசாரணை நடத்துவதற்காக அந்த இளைஞரை அவர் நிறுத்தினார்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

அப்போது இது புதிய மோட்டார் சைக்கிள் என்றும், ஆர்டிஓவால் முறையாக பதிவு செய்யப்படும் வரை பயன்படுத்துவதற்காக தற்காலிக பதிவு எண் (Temporary Registration Number) ஒன்றை பெற்றிருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த எண்ணையும் கூட அவர் தனது பைக்கில் குறிப்பிடவில்லை.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த இளைஞரிடம் டிரைவிங் லைசென்சும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. இதனால் அந்த இளைஞரின் சூழ்நிலை இன்னும் மோசமானது. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தான் புதிய டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், இன்னும் கைக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ஆக மொத்தம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எவ்விதமான பதிவு எண்ணும் இல்லாமல் வாகனத்தை இயக்கியது என 2 விதிமீறல்களை அந்த இளைஞர் செய்து விட்டார். இதன் காரணமாக அவரது பைக் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற ஒரு விதியையாவது அவர் கடைபிடித்ததால், அவரது நிலைமை இன்னும் மோசமடைவது சற்று தவிர்க்கப்பட்டது. சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை The IAS Views யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் இச்சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் விதிமீறலாக உள்ளது. இங்கு உரிய வயதை எட்டும் முன்பாகவே பலர் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். சாலைகளில் அதனை கண் கூடாக பார்க்க முடியும்.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ஆனால் இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எதுவும் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் உரிய வயதை எட்டியும் டிரைவிங் லைசென்ஸ் வாங்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் இங்கு அதிகம். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வர இத்தகைய விதிமீறல் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதனை குறைக்க வேண்டும் என்றால், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. இல்லாவிட்டால் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து விடுவதற்கான அபாயம் உள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet Rider Caught By IAS Officer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X