Just In
- 44 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விதியை மீறி ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்த எம்எல்ஏ... வைரல் வீடியோ...!
மாடிஃபிகேஷன் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி மும்பை நகரத்தின் எம்எல்ஏ, சுஸுகி பர்க்மேனை ஸ்கூட்டரை மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
சுஸுகி நிறுவனம், மேக்ஸி ரகத்திலான பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பிரமாண்டமான தோற்றத்தில் களமிறங்கிய இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் கணிசமான வரவேற்பு நிலவி வருகிறது. இந்த ரகத்திலான ஸ்கூட்டருக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரை மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிரைக் ரக வாகனமாக மாற்றியமைத்துள்ளார். அந்த இளைஞர் வேறும் யாருமில்லை மும்பை நகரத்தின் எம்எல்ஏ வரிஸ் பதான்-தான் இவ்வாறு செய்துள்ளார். இந்த ஸ்கூட்டரை அவர் மும்பையின் சாலையில் வைத்து இயக்கும் வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆல் இந்தியா மஜிலிஸ்-இ-இட்டெஹாதுல் முசுலிமீன் (AIMIM) என்ற கட்சியைச் சார்ந்த இவர், மும்பையை பூர்வீகமாகக் கொண்டு வசித்து வருகிறார். தற்போது மும்பை நகரத்தின் எம்எல்ஏ-வாக இருக்கும் இவர்தான், 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்கில் சிறைச் சென்ற நடிகர் சல்மான் கானுக்கு வழக்குரைஞராக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்தான் தற்போது உச்சநீதிமன்ற விதியை மீறும்வகையிலான காரியத்தை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் பர்க்மேன் ஸ்கூட்டரை, மூவர் அமர்ந்து செல்லும் வகையில் அவர் மாற்றியமைத்துள்ளார். இதற்காக அந்த ஸ்கூட்டரின் பின்பக்க கட்டுமானம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக, அந்த வீடியோக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அந்தவகையில், பர்க்மேனின் முன்பகுதி, அதன் உண்மையான தோற்றத்திலேயும், பின் பகுதி டிசைன் மட்டும் முழுவதுமாக மாற்றயமைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஸ்கூட்டரின் அகலத்தில் மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், நீளத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பர்க்மேனின் இந்த மாற்றத்திற்காக, ஸ்கூட்டரின் அடிப்பகுதி மற்றும் பாடி அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, பின்பக்கத்தில் இருவர் அமரும் வகையில் பென்ச் போன்ற இருக்கை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய தோற்றத்தால், பர்க்மேன் சாரட்டு எனப்படும் பயணிகள் வாகனத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?
பின் இருக்கையைத் தொடர்ந்து ரைடரின் இருக்கையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரைடருக்கு நாற்காலியைப் போன்ற இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பர்க்மேன் பல்வேறு மாற்றங்களப் பெற்று புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறது. இதற்காக மும்பையின் எம்எல்ஏ வரிஸ் பதான் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
தற்போது, இவர் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, அந்த பைக்கில் அமர்ந்து செல்லும் ஒருவர்கூட உயிர் கவசமான ஹெல்மெட்டை அணியவில்லை. தொடர்ந்து, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்கக்கூடாது என்று விதித்திருக்கும் உச்சநீதிமன்ற உத்தரவையும் அவர்கள் மீறியுள்ளனர். இவ்வாறு அவர் பல்வேறு விதிமுறை மீறல்களை மும்பை எம்எல்ஏ மேற்கொண்டுள்ளார்.
அண்மைக் காலங்களாக, ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸார்கள், இதுபோன்ற மாடிஃபிகேஷன் வாகனங்களை தீவிரமாக செயல்பட்டு சிறைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய எம்எல்ஏ இவ்வாறு செயல்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுபோன்ற சிறிய ரகத்திலான திறனைக் கொண்ட எஞ்ஜினில் பெரியளவில் மாற்றங்களை மேற்கொள்வது அதன் எஞ்ஜினை முடக்குவதற்கான வாய்ப்பின ஏற்படுத்தும். ஏனென்றால், ஸ்கூட்டர்களின் எஞ்ஜினின் இழுவை விசையானது, அதன் பாடி மற்றும் வாகனத்தில் அமர்பவர்களுக்கு ஏற்றவாறு பொருத்தப்படுகின்றன. இவையனைத்தும் மாறும்பட்சத்தில் ஸ்கூட்டரின் எஞ்ஜினுக்கு அதிகப்படியான வேலைப் பலு ஏற்படும். இதனால், அதன் எஞ்ஜின் திறன் முடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.
சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் 124சிசி திறனை வெளிப்படுத்தும் வகையிலான லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜின் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகிறது.