Just In
- 4 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!
ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வருகிறது. ஜாவா பிரியர்கள் இந்த பைக்குகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாவா நிறுவனம் தனது மூன்றாவது மாடலாக பெராக் என்ற பாபர் வகை பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மிக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த பைக் ஜாவா பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போதுதான் இந்த புதிய பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட இருக்கின்றன.
இந்த சூழலில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பெராக் பைக்கில் இருக்கும் பிஎஸ்-6 எஞ்சினை ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், ஜாவா நிறுவனம் இந்த செய்தி குறித்து விளக்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தற்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே, இதுதொடர்பாக வந்த செய்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஜாவா பெராக் பைக் போலவே, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 மாடல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போதைய மாடலைவிட பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலையில் வரும் வாய்ப்புள்ளது. ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடுள்ளது.
ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 6 எஞ்சினுடன் வரும்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளுக்கும் பெராக் பைக்கிற்கும் இடையே உள்ள விலை இடைவெளி கணிசமாக குறையும்.