Just In
- 53 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!
ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.
கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வருகிறது. ஜாவா பிரியர்கள் இந்த பைக்குகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாவா நிறுவனம் தனது மூன்றாவது மாடலாக பெராக் என்ற பாபர் வகை பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மிக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த பைக் ஜாவா பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போதுதான் இந்த புதிய பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட இருக்கின்றன.
இந்த சூழலில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பெராக் பைக்கில் இருக்கும் பிஎஸ்-6 எஞ்சினை ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், ஜாவா நிறுவனம் இந்த செய்தி குறித்து விளக்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தற்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே, இதுதொடர்பாக வந்த செய்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஜாவா பெராக் பைக் போலவே, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 மாடல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போதைய மாடலைவிட பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலையில் வரும் வாய்ப்புள்ளது. ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடுள்ளது.
ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 6 எஞ்சினுடன் வரும்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளுக்கும் பெராக் பைக்கிற்கும் இடையே உள்ள விலை இடைவெளி கணிசமாக குறையும்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!