Just In
- 1 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!
ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் ஜாவா 42 பைக்குகளில் விரைவில் சக்திவாய்ந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக் மாடல்களில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 293 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சினை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பெராக் பைக்கில் பயன்படுத்தப்படும் பிஎஸ்-6 எஞ்சின்தான் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஜாவா 300 மற்றும் ஜாவா 42 மாடல்களில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சினின் போர் அளவு அதிகரிக்கப்பட்டு பெராக் பைக்கில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பெராக் பைக்கில் 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானது.
இந்த எஞ்சினையே ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும். தற்போதுள்ள 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், பெராக் பைக்கில் உள்ள புதிய 334சிசி பிஎஸ்-6 எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, பெராக் பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதேபோன்று, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடலானது அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜாவா 300 பைக் ரூ.1.55 லட்சத்திலும், ஜாவா 42 பைக் ரூ.1.64 லட்சத்திலும், ஜாவா பெராக் பைக் ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் கிடைக்கிறது. இதில், ஜாவா பெராக் பைக் பிஎஸ்-6 மாடலாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் வரும்போது விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா