Just In
- 39 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜாவா 300, ஜாவா 42 பைக்குகளில் பவர்ஃபுல்லான புதிய பிஎஸ்-6 எஞ்சின்!
ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் ஜாவா 42 பைக்குகளில் விரைவில் சக்திவாய்ந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக் மாடல்களில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 293 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சினை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பெராக் பைக்கில் பயன்படுத்தப்படும் பிஎஸ்-6 எஞ்சின்தான் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஜாவா 300 மற்றும் ஜாவா 42 மாடல்களில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சினின் போர் அளவு அதிகரிக்கப்பட்டு பெராக் பைக்கில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பெராக் பைக்கில் 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானது.
இந்த எஞ்சினையே ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும். தற்போதுள்ள 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், பெராக் பைக்கில் உள்ள புதிய 334சிசி பிஎஸ்-6 எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது, பெராக் பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதேபோன்று, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ்-6 மாடலானது அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜாவா 300 பைக் ரூ.1.55 லட்சத்திலும், ஜாவா 42 பைக் ரூ.1.64 லட்சத்திலும், ஜாவா பெராக் பைக் ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளிலும் கிடைக்கிறது. இதில், ஜாவா பெராக் பைக் பிஎஸ்-6 மாடலாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் வரும்போது விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!