Just In
- 1 hr ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 2 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 3 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Movies யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?
9 ஆயிரம் ரூபாய் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை வாடிக்கையாளர் ஒருவர் கதற விட்டுள்ளார். டீலர்ஷிப்பில் எப்படி ஏமாற்றுகின்றனர்? என்பதை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்தன. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் மனதிற்கு நெருக்கமான மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மீண்டும் களமிறங்கியதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.
ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், தற்போது ஜாவா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஜாவா பைக்குகளை உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததே இதற்கு காரணம். இதனால் ஆத்திரமடைந்த பலர் ஜாவா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை ரத்து செய்து விட்டு, மீண்டும் ராயல் என்பீல்டு ஷோரூம்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் ஜாவா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளது. ஜாவா நிறுவன டீலர்ஷிப் ஒன்று, வாடிக்கையாளரின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்க முயன்றுள்ளது. வாடிக்கையாளரிடம் இருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாயை கூடுதலாக சுருட்ட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? அதுதான் ஹைலைட்டே.
பல்வேறு மாநில நீதிமன்ற தீர்ப்புகளில் ''ஹேண்டிலிங் சார்ஜ்கள்'' சட்ட விரோதம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர சுப்ரீம் கோர்ட்டும் கூட இதுபோன்ற கட்டணங்களை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கூட கார் மற்றும் பைக் டீலர்கள் தொடர்ந்து இத்தகைய கட்டணங்களை வசூலித்து கொண்டேதான் உள்ளனர்.
இதையேதான் சம்பந்தப்பட்ட ஜாவா நிறுவன டீலர்ஷிப்பும் செய்ய முயன்றுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் ஜாவா கிளாசிக் ட்யூயல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்குவதற்காக, அதன் டீலர்ஷிப் ஒன்றில் கொட்டோஷன் கேட்டுள்ளார். இதன் பேரில் அவர்கள் கொடுத்த கொட்டேஷனில் விலை எவ்வளவு குறிப்பிடப்பட்டிருந்தது தெரியுமா? 2,16,142 ரூபாய்.
இதில், எக்ஸ் ஷோரூம் விலை 1,76,242 ரூபாய், லைட் பார் மற்றும் மற்றவை ஆகியவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் 14 ஆயிரம் ரூபாய், பிடிஐ (PDI - Pre Delivery Inspection) 900 ரூபாய், சென்டர் ஸ்டாண்ட் 800 ரூபாய், ஹேண்டிலிங் மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றுக்கு முறையே ரூ.1,700 மற்றும் ரூ.500 மற்றும் டீடெய்லிங்கிற்கு 2,000 ரூபாய் அடக்கம்.
ஆக மொத்தம் 2,16,142 ரூபாய்க்கு டீலர்ஷிப்பில் கொட்டேஷன் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் டெலிவரி கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டீலர்ஷிப்பில் தரப்பட்ட கொட்டேஷனை பார்த்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து விட்டார். இது அநியாயமான விலை என அவர் நினைத்தார்.
எனவே நியாயமான விலை அல்ல என அவர் நினைத்தை எல்லாம் சிகப்பு குறியிட்டார். அந்த படத்தை நீங்கள் மேலே காணலாம். ஹைலைட் செய்யப்பட்டவை எல்லாம் விலையை உயர்த்துவதற்காக டீலர்ஷிப் அளவில் செய்யப்படும் தந்திரங்கள் என அவர் கருதினார். எனவே டீலர்ஷிப்பில் இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதில், ‘Others' என குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணங்கள் எதற்காக? என்ற கேள்விக்கு, அவை ஆர்டிஓ ஏஜெண்ட் கட்டணம் என்ற பதில் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் டீலர்ஷிப் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களால் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. இந்த தேவையற்ற கட்டணங்கள் குறித்து அவர் ஜாவாவிற்கு எழுதினார்.
அத்துடன் அந்நிறுவனத்தின் சிஇஓவிற்கும் டிவிட்டர் மூலம் அவர் இதனை தெரியப்படுத்தினார். இதனால் தென் இந்தியா ஜாவா ஆர்ஜிஎம்-மிடம் இருந்து அவருக்கு உடனடியாக செல்போன் அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் டீலர்ஷிப்பின் எம்டி-யும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்தார். இதன்பின் கூடுதல் ஹேண்டிலிங் மற்றும் ‘Others' என குறிப்பிடப்பட்டிருந்த கட்டணங்கள் நீக்கப்பட்டன.
இதன் மூலம் 2,07,336 ரூபாய் என கொட்டேஷன் குறைக்கப்பட்டது. அதாவது ஆன் ரோடு விலையில் சுமார் 9 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கலாம். இந்த வாடிக்கையாளரை போலவே நீங்கள் டீலர்ஷிப்களில் உஷாராக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!