Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...!
நீண்ட இழுத்தடிப்பிற்கு பின்னர் பெற்ற ஜாவா 42 பைக்கை, ஆர்டிஓ அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
1970ம் ஆண்டிற்குபின் ஜாவா நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் களமிறங்கியது. அப்போது, அதன் இந்திய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரியமிக்க கிளாசிக், ரெட்ரோ மற்றும் பாபர் ஸ்டைலிலான மூன்று புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்தது.
அதில், முன்னதாக ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளே விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. பாபர் ஸ்டைலிலான ஜாவா பெராக் மாடல் பைக், நடப்பாண்டின் இறுதியில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஜாவா நிறுவனம், இந்தியாவில் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாகச் செயல்படும் கிளாசிக் லெஜண்டஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது.
இந்நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, புக்கிங்குகளும் அதிகளவில் கிடைக்கப்பெற்று வந்தன. ஆனால், உற்பத்தி குறைவின் காரணமாக, ஜாவா நிறுவனத்தால், குறிப்பிட்ட நேரத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி செய்ய முடியாமல் சிக்கலை சந்தித்தது.
மேலும், நீண்ட இழுபறி நீடித்ததால், செலுத்திய முன் பணத்தை பலர் திரும்ப கேட்க ஆரம்பித்தனர். மேலும் சிலர், ஜாவா நிறுவனத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஜாவா 42 மாடல் பைக்கை நீண்ட இழுபறிக்கு பின் பெற்ற இளைஞர் ஒருவர், அதனை ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், பைக்கை பதிவு செய்ய முடியாது என ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதற்கு காரணமாக பைக்கின் பச்சை நிறத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜாவா நிறுவனத்தின் இந்த பச்சை நிறம், இந்திய ராணுவ சீருடையைக் குறிப்பிடுவதால், அதனை பதிவு செய்ய அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஜாவா பைக்கின் உரிமையாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த பைக்கை நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னரே அவர் பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில், ஆர்டிஓவின் மறுப்பு அவரை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.
ஜாவா நிறுவனம், ஜாவா 42 மாடல் பைக்கை ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைச் செய்து வருகின்றது. அதில், கேலக்டிக் க்ரீன் ஷேட் நிறமும் ஒன்று. இந்த நிறத்திலான ஜாவா பைக் அறிமுகமான போது, பலர் இந்த நிறம் சட்டபூர்வமானதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.
ஏனென்றால், ராணுவ பச்சை (ஆலிவ் பச்சை) நிறத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதை இந்திய அரசு தடைச் செய்துள்ளது. மேலும், அந்த நிறம் ராணுவ வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.
இதன்காரணமாகவே, கேரளாவைச் சேர்ந்த இளைஞரின் பச்சை நிறத்திலான ஜாவா 42 பைக், ஆர்டிஓ பதிவு செய்வதில் சிக்கலைச் சந்தித்துள்ளது. அந்த பைக், மோட்டார் வாகன சட்ட விதியை மீறியிருப்பதால் அதற்கு பதிவு சான்றிதழ் வழங்க, எர்ணாகுளம் ஆர்டிஓ மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஜாவா 42 பச்சை நிறத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பதிவு செய்ய முடியாது என்றும் ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் ஆர்டிஓ அதிகாரி, ஜாவா நிறுவனத்தின் கலமஸேரி பகுதி டீலரான கிளாசிக் மோட்டார்ஸுக்கு கடிதம் ஒன்றை கடந்த 16ம் தேதி எழதியுள்ளார்.
அதில், "ஆர்டிஓ பதிவிக்கிற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜாவா 42 பைக்கை பரிசோதித்தபோது, பைக் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, தற்போது நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகன விதிகளுக்கு எதிரானது. ஆகையால், இந்த கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தனிப்பட்ட விசாரணைக்காக வரவேண்டும்" என அதில் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை ஜாவா டீலர், அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பைக்கின் உரிமையாளர், அதுகுறித்து கிளாசிக் லெஜண்ட்ஸின் சிஇஓ-ஆன ஆசிஷ் ஜோஷியை தொடர்புகொண்டுள்ளார்.
அதற்கு, ஆசிஷ் ஜோஷி பதில் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், "நாடு முழுவதிலும் உள்ள ஆர்டிஓ-க்கள் மூலம், இந்த பச்சை நிறத்திலான ஜாவா பைக் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகையால், விரைவில் நாங்கள் உங்களை சந்திக்க வருவோம்" என கூறியுள்ளார்.
ஆகையால், இந்த ஜாவா 42 பைக் பதிவு செய்யப்படுமா... அல்லது இழுத்தடிக்கப் படுமா... என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் டிசைனில் மாறுபட்டு காணப்பட்டாலும், தொழில்நுட்ப அம்சங்களிஸ் ஒரே மாதிரியானதாக காட்சியிளிக்கின்றது. அதேபோன்று, அந்த பைக்குகளின் எஞ்ஜின் திறனும் ஒரே மாதிரியானதாக இடம்பெற்றிருக்கின்றது.
அந்தவகையில், 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் அந்த இரு மாடல் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!