Just In
- 9 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
Don't Miss!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
புக்கிங் செய்த 10 நாட்களில் பைக் டெலிவிரியா? - பதறிப் போய் விளக்கம் அளித்த ஜாவா!
ஜாவா பைக்குகளை புக் செய்தால் 10 நாட்களில் டெலிவிரி பெற முடியும் என்று வெளியான செய்திக்கு ஜாவா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . அத்துடன் உண்மையான காத்திருப்பு காலம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது.
ஜாவா பைக்குகளுக்கான டெலிவிரி காலம் 10 நாட்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக கடந்த வாரம் ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் செய்தி வெளியானது. ஜாவா பைக்கை புக்கிங் செய்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது ஜாவா பைக் முன்பதிவு செய்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், ஜாவா பைக்குகளை புக்கிங் செய்து 10 மாதங்களுக்கும் மேலாக பலர் காத்திருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜாவா நிறுவனத்தை பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கத் துவங்கியதுடன், சமூக வலைத்தளங்களிலும் பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாவா விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில், ஜாவா பைக்குகளின் காத்திருப்பு காலம் 10 நாட்களாக தடாலடியாக குறைந்திருப்பதாக வெளியானத் தகவல் முற்றிலும் தவறானது. வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரந்து கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் ஜாவா பைக்குகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இதனால், 10 மாதங்கள் வரை இருந்த காத்திருப்பு காலம் இப்போது 5 மாதங்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று ஜாவா நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜாவா பைக்கை புக்கிங் செய்து காத்திருப்பவர்கள் அமைதியடைந்துள்ளனர். மேலும், புதிய ஜாவா பெராக் பைக் அடுத்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அந்த பைக்கிற்கான முன்பதிவு ஜனவரியில் துவங்கப்பட இருக்கிறது.
இதனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் உற்பத்தியில் ஏதேனும் பாதிப்பு வருமா என்ற சந்தேகமும் நிவர்த்தியாகி இருக்கிறது. அதாவது, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகள் ஒரு உற்பத்திப் பிரிவிலும், பெராக் பைக் மற்றொரு பிரிவில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும்.
இதன் காரணமாக, உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்பதுடன், பெராக் பைக் வரும்போது உற்பத்தியை சீராக வைத்திருக்க வேண்டிய திட்டங்களையும் ஜாவா கையில் வைத்துள்ளது. எனவே, ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளை முன்பதிவு செய்தவர்கள் 5 மாதங்களில் டெலிவிரி பெறும் வாய்ப்பு இருக்கிறது.
ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் 27 எச்பி பவரை வழங்கும் 293சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெராக் பைக்கில் 30 எச்பி பவரை அளிக்க வல்ல 334 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கிறது. அதேபோன்று, ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் 293 சிசி எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!