Just In
- 47 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 4 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிரடியாக 3 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது ஜாவா!
ஸ்க்ராம்ப்ளர், ஆஃப்ரோடு உள்ளிட்ட வகைகளில் 3 புதிய மோட்டார்சைக்கிள்களை மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜாவா நிறுவனம். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்தது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். மஹிந்திராவின் துணை நிறுவனமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்தான் ஜாவா மோட்டார்சைக்கிள் வர்த்தகத்தை இந்தியாவில் பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவில் முதலாவதாக கொண்டு வரப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை உடனடியாக துவங்கப்பட்டது. ஆனால், பெராக் என்ற உயர்வைக மாடலின் விற்பனை உடனடியாக துவங்கப்படவில்லை. ஜாவா மற்றும் ஜாவா 422 மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்தும், உற்பத்தி பிரச்னை காரணமாக, நீண்ட காத்திருப்பு நிலவுகிறது.
இதனால், பெராக் மாடலின் விற்பனையை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த நிலையில், தி ஹிந்து பத்திரிக்கைக்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆசிஷ் ஜோஷி பேட்டி அளித்துள்ளார். அதில், 3 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களும் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு சிசி திறன் கொண்ட எஞ்சின் ரகங்களில் வர இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இந்த மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் அடுத்த 18 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 15ந் தேதி ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டு இந்தியாவில் காலடி வைத்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கிறது.
இதற்காக, நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புதிய பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவும், விற்பனையும் துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதுதவிர்த்து, ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள்களையும் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய தகவல்கள் ஜாவா பிரியர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது.
தற்போது ஜாவா 42 மற்றும் ஜாவா க்ளாசிக் 300 மோட்டார்சைக்கிள்களில் 300 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 27 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெராக் மோட்டார்சைக்கிளில் இருக்கும் 334 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் குறித்தும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. ஜாவா அடிப்பபடையிலான மாடல்களாக இவை வர இருக்கின்றன. எனவே, 300 சிசி எஞ்சின் புதிய ஆஃப்ரோடு மற்றும் ஸ்க்ராம்ப்ளர் மாடல்களில் பயன்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: The Hindu
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!