Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்.. 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்!
கவாஸாகி நிறுவனம், அதன் பிரபல நிஞ்சா 300 பைக்கின் 1,358 யூனிட் பைக்கினை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ஜப்பான் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கவாஸாகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா 300 மாடலை, திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அந்தவகையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் நடப்பாண்டின் மார்ச் மாதம் 12ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கவாஸாகி நிஞ்சா300 பைக்குகளை அந்நிறுவனம் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் அந்நிறுவனம், 1,358 யூனிட் நிஞ்சா 300 மாடல் பைக்குகளைத் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த பைக்குகளை அந்நிறுவனம் திரும்ப அழைக்க சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மிக முக்கியமாக முன்பக்க வீலில் இடம்பெற்றிருக்கும் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அவை திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், முன் பக்க வீலில் இருக்கும் பிரேக்கின் பிரைமரி லிப் சீல் போதுமான கடினதன்மை பெறாத காரணத்தால் அவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது கடினத் தன்மையைப் பெறாத காரணத்தால், பிரேக் பிடிக்கும்போது எளிதில் கிழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பைக்கருக்கு பேராபத்தை விளைவிக்கலாம்.
ஆகையால், கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 மாடல் பைக்குகளில், இவற்றை அப்டேட் செய்ய திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது, பிரச்னையைச் சந்தித்திருக்கும் நிஞ்சா 300 மாடல் பைக், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே உள்நாட்டு மூலப் பொருட்கள்மூலம், இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே கவாஸாகி நிஞ்சா 300 பைக், பிரேக் தோல்வி பிரச்னையைச் சந்தித்துள்ளது. ஆகையால், கவாஸாகி நிறுவனத்தின் டீலர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரான பைக்குகளை, இலவச அப்டேட் செய்துகொள்ள அதன் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த அப்கிரேஷனில், மாஸ்டர் சிலிண்டர் ரீபிளேஸ் செய்யப்பட்டு தரப்பட உள்ளது. அதேசமயம், இந்த கவாஸாகி நிறுவனத்தன் இலவச அப்டேட்டிற்கு, உங்களது பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள பிரத்யேக வலைதள பக்கத்தை அந்நிறுவனம் தயார் செய்துள்ளது. https://kawasaki-india.com/recalls/
கவாஸாகி நிறுவனத்தின் இந்த நிஞ்சா 300 மாடல் பைக், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருக்கின்றது. இது, அறிமுகம் செய்யப்பட்ட அப்போதிலிருந்து, தற்போது வரை கணிசமான வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பெற்று வருகின்றது.
அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் ரூ. 3.6 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட விரைவிலேயே அதன் விலையில் ரூ. 1 லட்சம் வரை குறைக்கப்பட்டது.
ஆகையால், தற்போது இந்த பைக் ரூ. 2.98 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.
இந்த விலை குறைப்புடன், கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 பைக்கில் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியைஅறிமுகம் செய்தது.
கவாஸாகியின் இந்த நடவடிக்கையால், விலை மதிப்பிற்கேற்ற மாடலாக நிஞ்சா 300 பைக் உருவாகியது.
அதேசமயம், கவாஸாகி நிஞ்ஜா 300 பைக்கிற்கான வரவேற்பு கணிசமாக உயரும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. அதற்கேற்ப வகையில், போட்டியாளர்களுக்கும் இது மிக சவாலான மாடலாக அமைந்துள்ளது. ஏனெனில், முக்கிய போட்டியாளர்கள் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான விலையில், இதற்கு ஈடான பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றனர்.
கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 39 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!